“மகாத்மா காந்தியைப் பற்றி திரைப்படம் வருவதற்கு முன்பு உலகில் அவரை யாருக்குமே தெரியாது” என்கிறார் நமது இந்திய பிரதமர் மோடி. அந்த அஞ்ஞானிக்கு ஒரு விஞ்ஞானி சொன்னதைக் கவனப்படுத்துவோம். “உலக அரசியல் சரித்திரத்தில் காந்தியடிகள் ஒரு விசேஷமான புருஷர். நாம் வசித்துக் கொண்டிருக்கிற இந்த காலத்திலேயே, நம்மிடையே பிரகாசமான வாழ்க்கையோடு கூடிய ஒரு மகான் தோன்றியிருக்கிறார். இது விஷயத்தில் நாம் பாக்கியசாலிகள். இதற்காக கடவுளுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர் – அந்த மகான் வருங்கால சந்ததியாருக்கு வழிகாட்டும் விளக்காக விளங்குவார்.” இது மகாத்மா காந்தியடிகள் பற்றி மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. இந்தத் தகவல்,1939ஆம் ஆண்டு (பிரதமர் மோடி பிறப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு) மகாத்மாவின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணன் (முன்னாள் குடியரசுத் தலைவர்) பிரத்யேகமாகத் தொகுத்த ‘மகாத்மா காந்தி’ நூலில் உள்ளது. மகாத்மாவுக்குக் காணிக்கையாக அப்போது ஆங்கி லத்தில் வெளியிடப்பட்ட இந்நூல், பிறகு வெ.சாமிநாத சர்மாவின் மொழிபெயர்ப்பில் தமிழிலும் வெளியானது. இந்நூலில், உலகெங்கும் உள்ள தலைவர்கள், கலை ஞர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள் உட்பட 63 பல்துறை வித்தகர்கள் மகாத்மா காந்தியின் ஆளுமையை மனம் தளும்பத் தளும்ப வியந்து புகழ்ந்திருக்கிறார்கள். எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. இந்திய தேசத்தைப் பாழ்படுத்த வந்தவர்களுக்குத்தான் வாழ்விக்க வந்த மகாத்மா காந்தியை யாரென்று தெரியவில்லை. - கவிஞர் பழநி பாரதி