ஈரோடு, பிப்.23- பணம், பதவிக்காக எதையும் செய்யும் எடப்பாடி பழனிசாமி கூட்ட மும், ஆளுநர் பதவியாவது கிடைக் காதா என அண்ணாமலையும் அலைகின்றனர் என கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புத னன்று மாலை பிரச்சாரம் மேற் கொண்டார். இக்கூட்டங்களில் அவர் பேசிய தாவது: அதிமுகவினர் இங்கே தேர்தல் வேலை செய்வது என்பது டெபா சிட் வாங்கி விடலாம் என்பதற்கா கத்தான். அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறார் என்றால், அது தமிழ் நாட்டிலிருந்து 3 பேர் ஆளுநர் பதவி பெற்றுள்ளனர்; குறைந்தபட்சம் ஆளுநர் பதவியாவது கிடைக்காதா என்று ஏங்குவதால்தான். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் அதிமுக ஆட்சியில் என்ன சாதித்தது? அம்மையார் ஜெய லலிதா கொண்டு வந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை கடந்த 4 ஆண்டு களாக கிடப்பில் போட்டனர். கஜா னாவைக் கொள்ளையடித்து, சூறை யாடி விட்டு, ரூ.10 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு இனி வருகிற அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கட்டும் என்று விட்டுச் சென்ற னர். இதேபோல, தமிழ்நாட்டிற்கு மோடி தலைமையில் உள்ள ஒன் றிய அரசு கொடுக்க வேண்டிய நிதி யை கொடுக்க மறுக்கிறது.
சட்டம் - ஒழுங்கைப் பற்றி பேசும் அருகதை, தகுதி எடப்பா டிக்கு இருக்கிறதா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில், அரை மணி நேரத்தில் 15 பேரைக் கொன்றதும், 200பேரை குண்டு காயங்களுக்கு உள்ளாக்கியதும் இவரது ஆட்சி யில்தானே! காவல்துறை, உளவுத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி கொடூரத்தை, தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என் றார். இதைவிட வேறு என்ன அவ லம் வேண்டும்? எடப்பாடி பழனி சாமியை நம்பி அந்தக் கட்சியில் உள்ளவர்கள் தங்கள் எதிர்கால அர சியல் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம். பாஜகவோடு இனி ஒருபோதும் சேரவே மாட்டேன் என்று முழங்கியவர் ஜெயலலிதா. அவர் மறைந்த மறுநாளே பாஜக வின் காலில் விழுந்து விட்டார்கள். பதவிக்காக, பணத்திற்காக எடப் பாடி கூட்டம் எதை வேண்டுமானா லும் செய்யுமா? சிறுபான்மை மக் களை கொன்று குவித்த பாஜக வுடன், எடப்பாடி கூட்டு வைத்துள் ளார். எம்ஜிஆர், அண்ணா, பெரி யார் கொள்கை இதுதானா? எந்த கட்சியாவது ஒரு மாநிலத்தில் கலவரத்தை உண்டாக்கியிருக்கி றார்களா? கோவை கலவரத்தில் சிறு பான்மை மக்களின் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான உடைமைகள் கொளுத்தப்பட்டன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் கலவரம் தான். ஆகவே, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள அதி முகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தின் போது, தமிழக தக வல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ.தங்கராஜ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலா ளர் சுந்தர் எம்எல்ஏ, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஎம் மூத்த தலைவர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.