சூழல் காரணமாக சில சந்தர்ப்பங்களில்,தீர விசாரித்தாலும் உண்மை புலப்படாது.ஐயப்பாடே மிஞ்சும்.உளவியல் துணைகொண்டு நம்பக்கூடிய தன்மையின்(Probability) அடிப்படையில் மெய்மையை உறுதிப் படுத்தலாம் என்கிறது,”Anatomy of a fall”என்ற பிரான்ஸ் படம்.
ஜெர்மானியப் பெண் சாண்ட்ராவின், பிரான்ஸ் கணவர் சாமுவேல். இருவரும் எழுத்தாளர்கள். இவர்களுக்கு பதினொரு வயதில், பார்வை பாதிக்கப்பட்ட ஒரே மகன் டேனியல்.நகரத்திலிருந்து தொலை தூரத்தில், பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலை பகுதி யில்,உப்பரிகையுடன் கூடிய மூன்றடுக்கு மர வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தனித்து வாழ்கின்றனர். ஒரு நாள் சாண்ட்ராவின் ரசிகை ஜோ, வீட்டின் முதல்தளத்தில் அவளிடம் பேட்டி எடுக்கிறாள். இரண்டாம் தளத்தில் மகன் டேனியல் அவனது செல்ல நாய் ஸ்னூப்பை குளிப்பாட்டுகிறான்.உப்பரிகையில் சாமு வேல் அவனது எழுத்து வேலையை பார்க்கி றான்.பேட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் சாமுவேல், அவனுக்கு பிடித்த பாடலின் இசையை அலறவிடுகிறான்.சத்தத்தால் பேட்டி தடைபடுகிறது. பிரிதொரு நாளில் பேட்டியை தொடரலாமென,ஜோ விடை பெறுகிறாள். சாண்ட்ரா இரண்டாம் தளத்திலுள்ள தனது அறைக்கு செல்கி றாள்.டேனியல் தனது செல்ல நாயுடன் பனிமழை காட்டில் நடைபயிற்சிக்காக வெளி யேறுகிறான். பயிற்சி முடிந்து வீட்டிற்கு வரும் டேனியல் வாசலில் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.வீட்டு வாசலின் அடர்ந்த பனிப்பொழிவின் அடுக்குகளின் மேல், தந்தை சாமுவேல் ரத்தப் பெருக்கில் இறந்து கிடக்கிறான். கொலையா?தற்கொலையா?என சாவில் சந்தேகப்படும் போலீஸ், சாண்ட்ரா வை முக்கியக் குற்றவாளியாக கருது கின்றது.வழக்காக்கி, விசாரணையும் நடை பெறுகிறது.
விசாரணையில்,கணவன் மனைவிக்கு இடையிலான கடும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு நடந்தது தெரியவருகிறது. அவன் சாண்ட்ராவால் தள்ளிவிடப் பட்டானா? இல்லை,மனைவியைப் போல் எழுத்தாளராகப் பெயர்பெற முடியவில்லை என்ற தீவிர மன உளைச்சலில் ஆத்திரம் கொண்டு உப்பரிகையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டானா?என்ற வாதமும், எதிர்வாதமும் நிகழ்கிறது. பூஞ்சையான உடல்வாகு கொண்ட நடுத்தரவயது கடந்த ஒரு பெண், ஓங்கு தாங்கான உடல்வாகு கொண்ட ஒருவரை உப்பரிகைத் தடுப்பைத் தாண்டி தூக்கிப் போட முடியுமா? கூடவே, பெயர் பெற்ற ஒரு எழுத்தாளர்க்கு கொலை செய்யத் தோன்றுமா? என்ற ஐயவாதமும் முன்வைக் கப்படுகிறது. நீதிமன்ற ஜூரர்களைப் போலவே பார்வையாளர்களும் தீர்மானிக்க முடியா மல் தடுமாற நேர்கிறது. சம இடைவெளியில் நிலை கொண்ட நீதி யின் பலன் சாண்ட்ராவுக்கு சாதகமாக அமைந்ததா? பாதகமாக அமைந்ததா? சாண்ட்ரா, டேனியல், நாய் ஸ்னூப் மற்றும் ஜோ போன்ற பாத்திரங்கள், ஆரம்பக் காட்சிகளில் அறிமுகப்படுத்தப்படு கிறார்கள். ஆனால் அதே வீட்டிலிருக்கும் சாமுவேல் கேமரா முன் நிறுத்தப்படமாட் டார். நீதிமன்ற விசாரணையின் போது, சாண்ட்ரா, டேனியல் நினைவுகள் வழியா கவே காட்சிப்படுத்தப்படுவார். மாடிப் படியிலிருந்து உருண்டு வந்த டென்னிஸ் பந்தை,துரத்தி வரும் நாய் ஸ்னூப்,அதனை கவ்வி,மாடிக்கு எடுத்துச் செல்லும்.பந்தை உருட்டிவிட்டது டேனி யலா?அல்லது சாமுவேலா?நாய் ஸ்னூப்பா? யாரென்று தெரியாது.பேட்டி யை தொந்தரவு செய்ய சாமுவேலே பந்தை எறிந்து,ஸ்னூப்பை எடுத்து வர சைகை செய்திருக்கலாம்!
இதுபோன்ற பல புதிர்களும் அதற்கான யூகங்களும் படம் நெடுகிலும் வருகின்றன. காவல்துறை விசாரணையில் சாண்ட்ரா மற்றும் டேனியல் ஆகியோர் வழங்கும் வாக்குமூலங்களிலிருந்து சற்றே விலகி நீதிமன்ற விசாரணையில் வேறுபடுத்தி வாக்குமூலங்கள் அளிப்பர். இதற்கான காரணமாக டேனியல்,தனக்கு நேர்ந்த விபத்தால் மறதி ஏற்பட்டதாக கூறுவதை யும், சாண்ட்ரா கூறுகின்ற காரணத்தையும் கோர்ட் சாதாரணமாக ஏற்பதும், சாமுவே லின் உடல் விழுவதை மீண்டும் மாதிரி நிகழ்வாக நடத்தி தரவுகள் சேகரிப்பதும், உளவியல் கோணத்தில் விசாரணை மேற்கொள்வதும், சாண்ட்ராவின் அந்தரங்க வாழ்க்கையை ஆராய்வதும், நீதிபதியே நேரடியாக விசாரிப்பதும் என்று நீதிமன்ற புலன் விசாரணை முறை வியப்பூட்டுகிறது. “தோற்றுவிட்டால், அது அப்படியே முடிந்துவிடும். ஆனால், வெற்றி பெற்றால், அது அப்படியே முடிந்து விடாது. ஒரு பரிசு கிடைக்கும். பரிசுக்காக சில நேரங்களில் அதிகமாக எதிர்பார்க்கின்றோம்” என்று சாண்ட்ரா அவளது வழக்கறிஞரிடம் கூறும் வசனம் ஆழமானது.
கதையின் போக்கிற்கு ஏற்றவாறு டேனியல் மீட்டும் பியானோ இசையே, இதமாகவும், எரிச்சலூட்டும் விதமாகவும் அவ்வப்போது பின்னணியில் வருகிறது. பட ஆரம்பத்தில் வரும், அமெரிக்க”50 சென்ட் பிம்ப்” வாத்தியங்கள் இசை, சாண்ட்ராவை எரிச்சலூட்டுவதற்கு சாமு வேல் பயன்படுத்தினாலும்,ரசிக்கத்தக்கது. சாண்ட்ராவாக நடித்துள்ள சாண்ட்ரா ஹூல்லர், விசாரணையின் போக்கு அவ ளுக்கு பாதகமான திசையில் செல்லும் போது, பெருமூச்சுவிட்டு தனது ஆழ்மன பயத்தை வெளிக்காட்டுவது, முகத்தை வெட்டி வெட்டி திருப்புவது போன்ற தத்ரூப மான நடிப்பை தந்து ஆச்சரியப்படுத்தி யுள்ளார். டேனியல் பாத்திரமேற்றுள்ள மிலோ மச்சாடோ கிரானர், அரசு வழக்கறிஞரும், சாண்ட்ரா வழக்கறிஞரும் மற்றும் நீதிபதி யும் மாறி மாறி கேள்விகள் கேட்கையில், அப்பாவியாக பார்ப்பது, தலையை சத்தம் கேட்கும் பக்கம் திருப்பி விஷயத்தை கேட்பது போன்ற இடங்களில் பரி தாபத்தை ஏற்படுத்திவிடுகிறார். வெண்பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர்களையும்;பல கோணங்களில் மரவீட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை யும்; சிண்ட்ரா கோர்டில் பதிலுரைக்கையில், நெருக்கக் காட்சியில் அவளது முக அசைவு களை மிக அருகாமையில் காண்பிப்பதும் அற்புதமான ஒளிப்பதிவிற்கான அடை யாளங்கள். பாத்திரங்கள் மற்றும் சம்பவங்க ளோடு ஒன்ற வைத்த பெருமை படத்தொகுப் பாளருக்கே சாரும். ஜஸ்டின் ட்ரைட் என்ற பெண் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஏற்க னவே மூன்று கவனிக்கப்பட்ட படங்களை இயக்கியவர்.2023க்கான சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது இவ ருக்கு இப்படத்திற்காக வழங்கப்பட்டுள ளது. அயர்ந்து உறங்கும் சாண்ட்ராவின் அணைப்பில் கண் விழித்தபடி படுத்தி ருக்கும் நாய் ஸ்னூப். இக்காட்சியோடு முடி யும் இப்படத்தில், மறைக்கப்பட்ட உண்மை எங்கிருந்தாலும் உறங்காமல் உறுத்திக் கொண்டே இருக்கும் என்ற செய்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மனதின் உணர்வுகளை செயல்பாடு களிலோ அல்லது வார்த்தையின் கூர்மை யிலோ அறிய முடியும்.ஆழ் மனதின் இடுக்கு களுக்குள் சிக்கி வெளி வராமல் பாசி படர்ந்து கிடக்கும் எண்ணங்கள் சில அவ்வப்போது வெளியே வந்து வேலையை காட்டிவிட்டு,மீண்டும் உள் நுழைந்து கொள்ளும்.மனித மனங்களை, ப்ராய்டு காலத்திற்கு முன்பிருந்தே உளவியலா ளர்களின் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டி ருந்தாலும், காமிரா துணையோடு பகுப் பாய்வுக்கு முயற்சித்த இயக்குநர் ஒரு பிரமிப்பை தந்துள்ளார். இந்தப் படம் பிரைம் அமேசானில் தமிழ் டப்பிங்கில் உள்ளது.