மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பாக பரமக்குடியில் தீக்கதிர் சந்தா தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாலுகாச் செயலாளர் டி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் ஆண்டு மற்றும் அரையாண்டு சந்தா என சேகரிக்கப்பட்ட 375 சந்தாக்களுக்கான தொகை 4 லட்சத்து 83 ஆயிரத்து 750 ரூபாயை தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி யிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கருணாகரன் வழங்கினார் .இந்நிகழ்ச்சி யில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. மயில்வாகனன், ஆர்.குருவேல், எம்.ராஜ்குமார், இ. கண்ணகி, தாலுகாச் செயலாளர்கள் பி.செல்வராஜ், வி. முருகன், பி.முத்துசாமி ,எஸ்.போஸ், கண்ணதாசன், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் உள்பட கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர் . கடலாடி கிழக்கு முகவர் ரமேஷ் கௌரவிக்கப்பட்டார்.