பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாப்புவா நியூ கினியாவில் கார்கார் (Karkar) தீவில் நூற்றுக் கணக்கான தென்னை மரங்கள் வானைத்தொட்டபடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சியளிக்கின்றன. ஒரு சில நூறாண்டுகளுக்கு முன்பு வரை தென்னைமரத்தின் காய்களுக்கு நல்ல விலை கிடைத்தது. அப்போது தேங்காய்க்கு நல்ல மதிப்பு இருந்தது. காலப்போக்கில் இதன் விலை சர்வதேச சந்தையில் சரிந்தது. ஆனால் இந்நாட்டின் வடக்கு கடலோரப்பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவு தேங்காயை மற்றொரு வகையில் மதிப்பு மிக்கதாக மாற்றி பயன்படுத்தி வருகிறது. காயின் உள்ளே இருக்கும் வெள்ளை நிற சதைப்பற்றுள்ள கொப்பரையில் இருந்து உயிரி எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
கொப்பரையில் இருந்து எரிபொருள்
தாவர எண்ணெய் அல்லது விலங்குகளின் கொழுப்பில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது போல இம்முறையில் கொப்பரை இயற்கை உயிரி ஆற்றல் மூலமாக பயன்படுத்தப் படுகிறது. கார்காரில் இந்த எரி பொருளே பள்ளிகள், மருத்துவ மனைகள், சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்திற்கான கப்பல்களில் பயன்படுகிறது. இந்த உயிரி எரிபொருள் தென்னைமரங்களும் கோகோவும் 980 ஹெக்டேர் பரப்பில் செழுமை யாக வளர்ந்திருக்கும் குலிலி (Kulili) என்ற தோட்டத்தில் வளரும் தேங்காயில் இருந்து உற்பத்தி யாகிறது. தீவுப்பகுதி முழுவதும் இந்த தோட்டம் பரந்து விரிந்துள்ளது. “தேங்காய் அடிப்படையிலான இந்த எரிபொருள் ஒவ்வொரு ஆண்டும் 6,00,000 லிட்டர் உற்பத்தி செய்யப்படு கிறது” என்று குலிலி தோட்ட மேலாண்மை இயக்குனர் டெரிக் மிடில்டன் (Derek Middleton) கூறு கிறார். தேங்காய் உயிரி எரிபொருளை தயாரிக்கும் சிறிய ஆலை குலிலி யில் 2007இல் நிறுவப்பட்டது. பல ஆண்டுகளில் இது படிப்படி யாக வளர்ந்து உற்பத்தியை விரி வாக்கம் செய்யும் புதிய முயற்சிகளு டன் இப்போது செயல்பட்டுவரு கிறது. அனைத்து கார்கார் அரசு வாக னங்கள், அவசர உதவி மருத்துவ சிகிச்சை வாகனங்கள், போலீஸ் வாக னங்கள், மோட்டார் வாகனங்கள், கப்பல்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் குலிலி தோட்ட வாகனங்களில் இது பயன்படுகிறது. வனவாட்டு, பிஜி போன்ற மற்ற பசிபிக் நாடுகளில் இத்தகைய சிறிய அளவிலான திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. பாப்புவா நியூ கினியா தொழில்நுட்பக்கழகம் (Unitech) என்ற முன்னணி ஆய்வு அமைப்பு இத்திட்டத்தை விரிவாக்கி கார்கார் தீவு அமைந்துள்ள மாடங் (Madang) மாகாணத்தில் கிராம, தொலைதூரப்பகுதிகளுக்கு விரி வாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த உள்ளூர் தொழிலை விரி வாக்குவதன் மூலம் விலையுயர்ந்த வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதி குறையும். என்றாலும் இது சவால்கள் நிறைந்தது. பாப்புவா நியூ கினியா மற்றும் மாடங் மாகாணத்திற்கு தேங்காயை எரிபொருளாக மாற்றிய ஒரு வரலாறு இதற்கு முன்பே உண்டு. 1980, 90 களில் போகைன்வில்லே (Bougainville) பகுதியில் புரட்சிப்படைகள் இந்த எரிபொருளை பயன்படுத்தின.
நீடித்த வளர்ச்சிக்கும் சூழல் நட்புக்கும்
உயர் தரமுடைய கொப்பரை, இயந்திரங்கள் மூலம் பிழியப்பட்டு பின் உலோக ஹைடிராக்சைடு கொண்ட காரக்கரைசல் மற்றும் ஆல்கஹாலுடன் கலக்கப்படுகிறது. வேதியியல் செயல்முறையின் மூலம் இது உயிரி எரிபொருளாக மாற்றப்படு கிறது. தனியாக பயன்படுத்தும்போது இது மிகச்சிறந்த சூழல் நட்புடைய எரிபொருள் என்று பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது டீசல் போலவே செயல்படு கிறது. என்ஜின்களை மாற்றாமல் இந்த உயிரி எரிபொருளை வழக்க மாக இப்போது பயன்பாட்டில் இருக்கும் புதைபடிவ எரிபொருட் களுடன் கலந்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாதமும் இந்த உயிரி எரிபொருள் பாரம்பரிய எரிபொருள்பயன்பாட்டை 50,000 லிட்டர் அளவிற்கு குறைத்துள்ளது. என்றாலும் 25,000 லிட்டர் பாரம்பரிய டீசல் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இதற்கு பயன்படும் தேங்காய்கள் குலிலி தோட்டத்தில் இருந்தே பெறப்படுகிறது. 1920களில் முதல் உலகப் போரின்போது இங்கு ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலியாவின் வில்லியம் மிடில்டன் (William Middleton) என்பவர் இந்த இடத்தை வாங்கி தோட்டத்தை உருவாக்கினார். அப் போது முதல் ஆஸ்திரேலியா பி என் ஜி மிடில்டன் குடும்பத்தின ரால் இந்த தோட்டமும் எண்ணெய் எடுக்கும் வசதியும் நிர்வகிக்கப்படு கிறது. இன்று இவை வில்லியம் மிடில்டனின் பேரன்கள் டெரிக் (Derek), ஃப்ரெட் மிடில்டன் (Brett Middleton) ஆகியோரால் நடத்தப் படுகிறது. போதிய நிதியுதவி கிடைத்தால் 500,000 மக்கள் வாழும் மாடங் மாகா ணம் முழுவதற்கும் தேவையான எரி பொருளை தேங்காயில் இருந்தே பெற முடியும் என்று டெரிக் கூறுகிறார். “இத்தொழிலில் செய்யப்படும் முதலீடுகள் இலாபம் தருபவை. நீடித்த வளர்ச்சிக்கு உதவுபவை. இத்திட்டம் விரிவாக்கப்பட்டால் இங்கு வேலை இல்லாப் பிரச்சனை தீரும். உயர் திறன் தேவைப்படாத பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.
ஆற்றல் தேவையை நிறைவு செய்யும் இயற்கை வழி
இத்தொழில் வளர்ச்சி அடைந் தால் மாகாண அரசிற்கு பொருட்கள் மற்றும் சேவை வரி மூலம் கிடைக் கும் வருவாய் அதிகரிக்கும். இது இப்பிராந்தியத்திற்கு ஒரு முன் மாதிரி யாக திகழும்” என்று பொருளாதார நிபுணர் மஹாலோபா லவைல் (Maho lopa Laveil) கூறுகிறார். இத்திட்டம் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு, உள்ளூ ரில் கிடைக்கும் பொருட்களை கொண்டே இயற்கை எரிபொருள் தயாரிக்கும் திட்டத்திற்கு, சூழல் நட்புள்ள உன்னத வணிக மாதிரியாக உள்ளது. தேங்காய் கொப்பரையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இந்த உயிரி எரிபொருள் உற்பத்தி அதிகமாகும்போது உலக மக்க ளால் இது பெருமளவில் பயன்படுத் தப்படும். உலக நாடுகள் அனைத் திற்கும் இத்திட்டம் ஒரு சிறந்த முன் மாதிரி என்று ஆய்வாளர்கள் நம்பு கின்றனர்.