பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக மத்திய வலதுசாரியான குடி யரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய ஆணையரும், பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டவருமான மைக்கேல் பார்னி யரை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன். பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளின் புதிய மக்கள் முன்னணி அதிக இடங்களை வென்று இருந்தது. ஆனால் ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. எனினும் மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப பிர தமர் பதவியை இடதுசாரிகள் முன்மொழி யும் வேட்பாளருக்கே கொடுக்க வேண்டும் என புதிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வந்தது. ஆனால் ஜனாதிபதி மக்ரோன், இடது சாரிகள் கையில் அதிகாரம் சென்று விடக்கூடாது என, தீவிர வலதுசாரி களுடன் ரகசியக் கூட்டணி வைத்து செயல்பட்டார். இடதுசாரிகள் அமைச்சர் களாக பங்கெடுக்கும் அமைச்சரவையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தீவிர வலதுசாரியான லீ பென்னின் ‘நேசனல் ரேலி’ கட்சியினர் வெறுப்பைக் காட்டிவந்தனர். இதன் காரணமாக கடந்த 3 மாதங் களாக பிரதமரை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த மக்ரோன், தற்போது மைக்கேல் பார்னியரை பிரதமராக நிய மித்துள்ளார். இது மக்கள் அளித்த தேர்தல் முடிவைத் திருடும் செயல் என பிரான்ஸ் அன்பவ்டு (LFI) எனும் இடதுசாரிக் கட்சியின் ஜீன்-லூக் மெலன்சோன் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘நேசனல் ரேலி’ கட்சியும் தனது ஆத ரவை இன்னும் தெளிவுபட அறிவிக்க வில்லை. பார்னியரின் கொள்கை உரை, பட்ஜெட் குறித்த அவரது பார்வை, செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா தெரிவித்துள்ளார்.