ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கை ஒன்று நமக்கு அதிர்ச்சியான தகவலை தந்துள்ளது. அதாவது 6-7 மாதங்களில் கிட்டத்தட்ட 22 நாடுகளில் பெரும் உணவுத் தட்டுப்பாடும் பாதுகாப்பின்மையும் உருவாகும் என அந்த அறிக்கை சொல்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் அந்தந்த நாடுகளில் உள்நாட்டு குழப்பங்களும் தவறான பொருளாதாரக் கொள்கைகளுமே மிக முக்கியமானது என ஐநா வரையறுக்கிறது. நைஜீரியா, சூடான், எத்தியோப்பியா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, மலாவி, ஹைத்தி, சோமாலியா, சாட், நைகர், மொசாம்பிக், பாலஸ்தீனம், கென்யா, மாலி, லெபனான், நமிபியா, லெசோதோ ஆகிய இந்த பட்டியலில் மக்கள் படும் துயரங்களும், கொடுமைகளும் பெருந்துயர். சுற்று சூழலும் மிக கடுமையாக மாசுபட்டுள்ளது.
காலநிலை மாற்றமும் கொசுவினால் பரவும் நோய்களும்
இந்தியா உள்ளிட்டு பல வெப்ப மண்டல பகு திகளில் தான் கொசுவி னால் பரவும் நோய்கள் அதிகம். காரணம் அவை வளர, இனப்பெருக்கம் செய்ய இந்த தட்ப வெப்ப சூழலே உதவி யது. இது பழைய கதை. புது உண்மை என்ன தெரியுமா? ஐரோப்பிய நாடுகள் பொதுவாகவே குளிர் பிரதேசங்கள். ஆனால் கால நிலை மாற்றம் இந்த நாடுகளில் புது வகை பிரச்சனை களை உருவாக்கி வருகிறது. அங்குள்ள நாடுகளில் சமீபமாக மழைக்காலங்கள் மாறும் நிகழ்வு. அதாவது நம்மூர் புரிதலில் பருவம் தவறி பெய்யும் மழை கொசு உற்பத்திக்கு ஏதுவாக இருப்பதால் 2024 இல் மட்டும் 19 ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் நைல் வைரஸ் நோய் வேகமாக பரவியது. பல நாடுகளில் இந்த நோயால் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளில் சென்ற சில ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது. இந்த துறை அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு டெங்கு நோய் குறித்தும், அதன் தடுப்பு முறை சிகிச்சை, விழிப்புணர்வு, எவ்வகையான மருந்துகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்யலாம் என பல பணிகளில் இறங்கியுள்ளது. கால நிலை மாற்றங்கள் செய்யும் லீலைகள் தொடரும்.
21 கிராம ஊராட்சிகளும் அதானி குழுமமும்
ஒரிசா மாநிலத்தின் மலைப் பகுதிகளில் ஒன்றான கந்தாமர்தான் பகுதியை சேர்ந்த 21 கிராம ஊராட்சிகளின் மக்கள் கடந்த நவம்பர் 23 தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக இந்த தொடர் போராட்டம்? அந்த மலைப்பகுதியில் சுமார் 45 ஹெக்டேர் நிலத்தை அதானி குழுமம் வாங்கி யுள்ளது. மிகுந்த கனிம வளம் குறிப்பாக பாக்சைட் கொண்ட பகுதியை அதானி நிறு வனம் வாங்குவதால் சுரங்கங்கள் வெட்டி கனிம வளத்தைச் சுரண்டினால் இயற்கைச் சூழல் மற்றும் பல்லுயிரினங்கள் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள னர். எப்போதும் போல அரசு அதானி குழுமம் செய்வது காடுகள் பாதுகாப்புக்காக எனும் சால்சாப்பு சொல்கின்றது.