tamilnadu

img

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்

“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்”
நான் மிக ஆழமாக நம்புகிற வரிகள் இவை. உள்ளத்தில் உண்மையும், தெளிவும் இருந்தால்தான் வாக்கினில் அது வெளிப்படும். இது மார்க்சிஸ்டுகளுக்கு மிகவும் பொருந்தும். ஏன் என்றால் உண்மையான தத்துவத்தின்பால் உள்ளத்தை பறிகொடுத்தவர்கள் மார்க்சிஸ்டுகள். அவர்களால்தான் ஈடு இணையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். அவர்களுடைய வாக்கின் ஒளியில் நம் தேசத்தின் இருட்டு மறையும் நாள் வெகுதொலைவில் இல்லை.

“மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய பிரச்சனைகளுக்காகத் தன்னடக்கத்தோடு இணைந்து செயல்பட்டால், மக்கள் நம்மை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள்” 

“உங்களைச் சுற்றிப் பாருங்கள்... முதலாளித்துவம்தான் இன்றைக்கு நெருக்கடியில் இருக்கிறது. அந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தொழிலாளர், விவசாயிகள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சாதிய, மதவாதச் செயல்பாடுகளை அது முன்னெடுக்கிறது. இந்தச் சமூக அமைப்பிற்கு மாறானது சோஷலிசம். அந்தப் பாதையில் உலகம் பயணிக்கும்”