ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை
சென்னை, மே 23 - நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா வுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முரு கன் உத்தரவிட்டுள்ளார். பொது நோக்கத்திற்காக கையகப்படுத் தப்பட்ட தங்கள் நிலம், அதற்குப் பயன் படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்த தால், அதை மீண்டும் தங்களுக்கே வழங்க கோரி லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாததைத் தொ டர்ந்து அன்சுல் மிஸ்ரா மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரப்பட்டது. சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணை யத்தின் முன்னாள் செயலாளர் ஐஏஎஸ் அதி காரி அன்சுல் மிஸ்ராவுக்கு வெள்ளிக்கிழமை (மே 23) தண்டனை விவரங்கள் அறிவிக்கப் பட்டன. நீதிபதி வேல்முருகனின் உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதால் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இருப்பி னும், மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்ப ளிக்கும் வகையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்சுல் மிஸ்ரா தனது சம்பளத்திலிருந்து இரு வயதான மனு தாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். 30 நாட்களுக்குள் அன்சுல் மிஸ்ரா மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை எனில், அவரைத் தண்டனை அனுபவிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தர விட்டுள்ளார். அன்சுல் மிஸ்ரா தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.