tamilnadu

img

உங்களது மனசாட்சி நம்புமா?

“பாஜக கூட்டணியில் இருந்தா லும் நெய்வேலிக்காக  உறுதி யாக குரல் கொடுப்பேன்”. - சொல்கிறார் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் தங்கர்பச்சான்.  தனது கூட்டணி கட்சியான பாஜக வால் நெய்வேலி நிறுவனத்துக்கு ஆபத்து  உள்ளது என்பதை தங்கர் பச்சான் ஏற்றுக்  கொள்கிறார். ஆனால் அவரால் அதனை  எதிர்க்க முடியுமா? இவரின் கட்சித் தலைவர்களே  அந்தர்பல்டி அடித்து குடியுரிமை சட்டம்/ வேளாண் சட்டங்கள் என அனைத்தையும் ஆதரித்தனர். மருத்துவர் ஐயா அவர்கள் பாஜக வுக்கு பூஜ்யத்துக்கும் கீழே மதிப்பெண் கொடுத்துவிட்டு அதே கட்சியை  ஆதரிக்கிறார். ஊட்டியில் உள்ள அரசு மருந்து உற்பத்தி ஆலையை மூடி விட்டு தனியாருக்கு வாய்ப்புகளை உருவாக்கியது இவரது கட்சியின்  இன்னாள் தலைவர்தான் என்பதை தங்கர்பச்சான் அறியவில்லை போலும். ஊட்டி மக்களும் தொழிலாளர்களும் சிபிஎம் தலைவர்கள் பிருந்தா காரத் மற்றும் டி.கே.ரெங்கராஜன் என எல்லோரும் போராடிய  பின்னர்தான் இந்த ஆலைகளை மீண்டும் மீட்டனர். தான் இயக்கும் திரைப்படங்களில் தங்கர்பச்சான் வானத்தை வில்  லாக வளைக்கலாம்! மணலை கயிறாக திரிக்கலாம்! ஆனால் பாமகவின்  வேட்பாளராக இருந்து கொண்டு நெய்வேலியை பாஜகவின் தனியார்  கொள்ளையிலிருந்து  காப்பாற்ற முடியும் என்பதை அவரது மனசாட்சியே கூட நம்பாது.