நான் வெள்ளைக் கொடியும், காவிக் கொடியும் கொண்டு செல்லவில்லை!
எடப்பாடிக்கு முதலமைச்சர் பதிலடி
சென்னை, மே 27 - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்லி, எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தொகுதியான சென்னை கொளத் தூரில் பல்வேறு திட்டங்களை செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய முதலமைச்சர், “திமுக ஆட்சி யைப் பற்றி குறை சொல்ல எடப்பாடி பழனி சாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவருக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “நான் தில்லிக்கு வெள்ளைக் கொடியும் கொண்டு செல்லவில்லை; காவிக் கொடி யும் கொண்டு செல்லவில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். கொள்ளைய டித்த கட்சியான அதிமுக ஆட்சியில் சாத்தான் குளம், தூத்துக்குடி என ஏகப்பட்ட சம்ப வங்கள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி வீம்புக்கென செய்து கொண்டிருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.