ஒன்றிய பாஜக அரசின் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து
மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம்
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்தைக் கண் டித்தும் இதனை வாபஸ் பெறக்கோரியும் நாடு முழு வதும் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.மதுரை யில் ஏப்ரல் 13 ஞாயிறன்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை கோரிப்பாளை யம் பள்ளிவாசல் அருகில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மதுரை மாவட் டம் சார்பாக மாபெரும் கண் டனப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மதுரை மாவட்ட சபையின் தலைவர் மௌ லானா எஸ். சதக்கத்துல் லாஹ் மன்பஈ பாஜில் ஜமாலி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகள், இஸ்லா மிய இயக்க நிர்வாகிகள் மற்றும் சமுதாய முன்னோடி கள் முன்னிலை வகித்தனர். துரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலா ளர் மௌலானா .முஹம்மது இப்ராஹிம் ஒருங்கிணைத்து நடத்தினார். பொதுக்கூட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வே. கனி அமு தன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசி ரியர் அருணன், மதுரை மாவட்ட அரசு காஜியும் ஜேஎம்எஸ் அரபுக் கல்லூரி யின் தலைவருமான எஸ்.சபூர்முஹைதீன் மிஸ்பாஹி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை யின் பொருளாளர் மௌ லானா பி.ஏ.அகமது சாலிஹ் யூசுஃபி நன்றி கூறினர் இக்கண்டனப் பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெருந்திர ளாக கலந்து கொண்டனர். வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.