tamilnadu

img

பட்டாசு ஆலை விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை, பிப். 21- சிவகாசி அருகே ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து  குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி மாவட்ட ஆட்சியருக்கும், காவல்  கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தர விட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ராமு தேவன் பட்டி யில் உள்ள தனியார் பட்டாசு ஆலை யில் கடந்த 17ஆம் தேதி ஏற்பட்ட  வெடி விபத்தில், அங்கு பணிபுரிந்த 4 பெண்கள் உட்பட 10 தொழிலாளர் கள் உயிரிழந்தனர். மேலும் 4 தொழிலாளர்கள் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில்  உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்ச மும், காயம் அடைந்தவர்க ளுக்கு ஒரு லட்சமும் முதல மைச்சர் பொது நிவாரண நிதியி லிருந்து வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாளி தழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து  வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ராஜ  இளங்கோ, சம்பவம் தொடர்பாக  4 வாரங்களில் விரிவான அறிக்கை  தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சி யர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.