tamilnadu

img

வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம்... -சி.ஸ்ரீராமுலு

இந்திய நிலப்பரப்பில் தென்பகுதியான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் வரலாற்றில் நீண்ட தனித்துவமான பண்பாட்டு பாரம்பரியம் கொண்டுள்ளன. இதை பழங்கற் காலந்தொட்டு காணப்படும் தொல்லியல் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. வேட்டை விலங்கு போன்று அலைந்து திரிந்த மனிதன், ஓரிடத்தில் நிலையாக தங்கி உணவு உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியது புதிய கற்கால பண்பாட்டின் துவக்கமாகும். இந்த பண்பாடு பொதுவான ஆண்டு முறையான (பொ.ஆ.முன்) 6,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது ஆதிச்சநல்லூர், பிரம்மகிரி, மைசூர், நாகார்ஜுனா கொண்டா, எல்லீஸ்வரம் ஆகிய பகுதிகளில் கிடைத்த எலும்புக்கூடுகள் மண்டை ஓடுகளையும் மானிடவியல் பகுப்பாய்வு செய்த அறிஞர்கள் இப்பகுதியில் வாழ்ந்த திராவிட மொழிகள் பேசுவோரின் மூதாதையரை இனங்கண்டுள்ளனர். மேலும் புதிய கற்காலத்தின் தொடர்ச்சியாக இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலம், வரலாற்று காலம் என வளர்ச்சியடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான், கீழடியில் புதையுண்டு கிடந்த தொன்மையான வைகைக் கரை நாகரிகத்தைக் கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருட்டிணன் வரலாற்று கருத்தரங்கம் ஒன்றில் பேசுகையில், “நகர விரிவாக்கம், தொழிற்சாலைப் பெருக்கம், செங்கற் சூளைகள் அமைப்பதற்காக மண் தோண்டுதல் போன்றவற்றால் வைகைக் கரையில் நிலத்திற்கு அடியில் புதைந்து கிடக்கும் சங்ககால வரலாற்றுத் தொல்லியல் எச்சங்கள் அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாத்து ஆவணப்படுத்த தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்”. என்றார்.

இத்தகைய பின்னணியில், பாண்டிய நாட்டு வர லாற்று ஆய்வு மையம் என்னும் அமைப்பு ‘வர லாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்’ என்ற  நூலையும் ‘திருத்தங்கல் பகுதியில் தொல்லியல்  ஆய்வுகள்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளது. அடுத்த கட்டமாக, விருதுநகர் மாவட்டத்தின் வர லாற்றுச் சின்னங்களையும் சுற்றுலா தலங்களையும் சிறந்த முறையில் மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சி யர் வீ.ப.ஜெயசீலன் கருத்தரங்கிற்கு ஒன்றிற்கு ஏற்  பாடு செய்திருந்தார். அதையொட்டி வரலாற்றில் அளற்று நாடு, தொல்லியல் களத்தில் பெருங்கற்கால பண்பாட்டு மரபுகள், தொன்மை மிகு செட்டிகுறிச்சியில் வர லாற்று தடயங்கள், பைந்தமிழகத்தில் பாண்டிய நாட்டு நகரங்கள், ஆசிரியம் கல்வெட்டு, கல்வெட்டு களில் வணிகர்கள், சமணத் தடயங்கள், கலைச் சிற்பங்கள், கரிசல் வெளியில் களப்பிரர் தடயம்,  ஊர் பெயர்களில் குளம், ஆங்கிலேயர் ஆட்சியில் தானதர்மங்கள், சதி வகை, புலி குத்தி பட்டான் கல்  என்று 51 ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து “வைப்பாற்  றங்கரையின் வரலாற்றுத் தடம்” என்று மலராக வெளிக்கொண்டு வந்துள்ளது. விருதுநகர் மாவட்  டத்தின் முக்கிய வரலாற்று தடயங்கள், சமணம் சார்ந்த செய்திகள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த  இடங்கள், புதிய கல்வெட்டு கண்டுபிடிப்புகள், மானிடவியல் சார்ந்த பல தலைப்புகளில் ஆய்வுக்  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர்...

இம்மாவட்டத்தின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,” வரலாற்றுப் பெருமை கள் பலவற்றைக் கொண்டது விருதுநகர் மாவட்டம். இங்குள்ள கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள், நீர்நிலைகள், தொழிற் கூடங்கள் என பலவற்றிலும்  வளமும் பலமும் பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் நமது தமிழ்நாடு அரசின் சின்ன மாக பெருமை பெற்றுள்ளது. நூற்பாலைகளுக்கு பெயர் பெற்ற ராஜபாளையம், தமிழ்நாட்டின் ஜப்  பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, வணிக  முக்கியத்துவம் வாய்ந்த விருதுநகர், அருப்புக் கோட்டை, சாத்தூர் என பல தொழில் நகரங்க ளையும் கொண்டது” என்று தனக்கே உரித்தான பாணியில் தனது வாழ்த்துச் செய்தியில் பதிவு செய்திருக்கிறார்.

அடுத்த தலைமுறைக்கு...

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பண்பாட்டுத் தரவுகளை அள்ளி அள்ளிக் கொடுக்கும் வெம்பக்கோட்டை, மாவட்டத்தின் முக்கிய வரலாற்று தடம் என்பதை தமது வாழ்த்துச் செய்தியில் அழுத்தம் திருத்த மாக பதிவு செய்திருக்கும் நிதியமைச்சர் தங்கம்  தென்னரசு, “வரலாற்றுச் சிறப்புகள் அளவற்று தன்ன கத்தே கொண்டது விருதுநகர் மாவட்டம். பழங்கற்கா லக் கருவி கிடைத்த ‘ஆவியூர்’ இன்றைய விருது நகர் மாவட்டத்தில் அடங்கியுள்ளது. சிலப்பதிகா ரத்தில் இடம் பெற்ற தங்கால் என்ற ஊர் சங்கப் புல வர்கள் சிலர் வாழ்ந்த ஊராகும். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், ஆண்டாள் பிறந்த திருத்தலமாகும். 14 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருச்சுழி மாவட்டத்தில் அடங்கி உள்ளதால் வரலாற்று ஆர்வத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லவும் மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் ஆட்சியர் எடுத்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

கள ஆய்வுக்கு ஊக்கம்...

தமிழக வரலாற்றில் தடம் பதித்த மாவட்டங்க ளில் விருதுநகர் மாவட்டம் ஒன்றாகும். ஆங்கி லேயர்கள் ஆட்சி காலத்தில் இன்றைய விருதுநகர்  மாவட்ட பகுதிகள் அன்றைய ராமநாதபுரம் மாவட் டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1985 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி தனி மாவட்டமாக விருதுநகர் உருவாக்கப்பட்டது. இதன் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலை. கேரளா. வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள். கிழக்  கில் ராமநாதபுரம் மாவட்டத்தையும் தெற்கில் தூத்  துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்க ளையும் எல்லையாக கொண்டுள்ளது. கற்காலம் தொடங்கி தற்காலம் வரை பல பன்  னாட்டு மரபுகளை உள்ளடக்கியது விருதுநகர். அதி லும் குறிப்பாக பெரும் கற்கால பண்பாட்டு அடை யாளங்களை அதிகம் காண முடிகிறது. அதற்கேற்ப மாவட்டத்தின் மேற்கே இயற்கையாக அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையும் அதன் மூலம் உற்பத்தி யாகி வரக்கூடிய அருவிகளும், ஆறுகளும், கண்  மாய் மற்றும் குளங்களும் காரணமாக அமை கின்றன.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறு,  சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள், குடைவரை கோயில்கள், பள்ளிப்படை கோவில், மலை வாழ்விடங்கள் என பல பெருமைகளை தன்ன கத்தே கொண்டது விருதுநகர் மாவட்டம். இங்குள்ள  வைப்பாற்றின் பிறப்பிடம் தமிழ்நாடு-கேரளா எல்லை யான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இது  விருதுநகர் மாவட்டத்தில் பாயும் ஆறு. இதன் நீளம் 130 கிலோமீட்டர் ஆகும். கேரள மாநிலத்தில் உருவாகி தேனி வழியாக விருதுநகரில் பாய்ந்து தூத்துக்குடிக்கு 40 கிலோ  மீட்டரில் மன்னார் வளைகுடாவில் கலக்கிறது வைப்  பாறு. இந்த ஆற்றங்கரையில் கிடைத்திருக்கும் வர லாற்றுத் தரவுகளை பதிவு செய்து வெளியிடும் பணி யில் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசின் தொல்லி யல் துறையும் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இன்னும் கள ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சிற்றூர்கள் பலவும் உள்ளன. சஞ்சீவி மலையின் வடக்கு வலையப்பட்டி அடி வாரத்தில் பெருமளவில் முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. கோயில் கலைகளில் மிகவும் முக்கியமான ஒன்று சிற்பக்கலை. இந்த சிற்ப கலையின் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடி கிறது. அதேபோல் ஆவியூர், விழுப்பனூர், குன்னூர்,  ஆயர் தர்மம், மகாராஜபுரம், சுந்தரராஜபுரம், திருத்  தங்கல் என்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் பெருங்  கற்கால பண்பாட்டு சின்னங்கள், கல்வட்டம், நெடுங்கல் போன்றவை கிடைத்துள்ளன.

விருதுநகர், ராஜபாளையம் வட்டங்கள் தென்  தமிழ்நாட்டில் வைப்பாற்று வெளியில் (பள்ளத் தாக்கில்) உள்ளன. இப்பகுதியில் ஓடும் அர்ஜுனா  நிதி மேற்கு தொடர்ச்சி மலைகளின் உட்பிரிவு களான சதுரகிரி, செண்பகத் தோப்பு மலையில் உற்பத்தியாகி இருக்கன்குடியில் வைப்பாற்றுடன் கலக்கிறது. வரலாற்றுக் காலத்தில் பாண்டிய நாட் டின் பகுதியாக விளங்கிய இந்த நிலப்பகுதிகள் தனக்கென உரிய பண்பாடு, மரபுகளை கொண்டுள்  ளன. இவை குறித்து அவ்வப்போது சில கள  ஆய்வாளர்கள் புதிய தரவுகளைக் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரை யும் ஒருங்கிணைத்து நல்ல ஆய்வு முன்னோடிகள் மூலம் பயிற்சி கொடுத்து மேலும் ஆய்வுக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த மலர் உருவாக்கப்பட்டுள்ளது.