மதுரை, ஜூலை 10- நீட் தேர்வு முறைகேட்டில் குற்ற வாளிகளுக்கு ஆதரவாக செயல் படும் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய தேர்வு முகமை நீட் ஆள் மாறாட்டம் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்று சென்னை யை சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணை யின் போது பல்வேறு மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் முதல் குற்ற வாளியாக சென்னை மாணவர் உதித் சூர்யா, மேலும் சில மாண வர்கள், பெற்றோர்கள், தேர்வுக்கு புரோக்கராக செயல்பட்டவர்கள் என 27 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீ சார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தன்னை விடுவிக்கும்படி சென்னையைச் சேர்ந்த தருன் மோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் மீதான விசா ரணை நீதிபதி புகழேந்தி முன்பு புத னன்று நடைபெற்றது. அப்போது கூடுதல் அரசு குற்ற வியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, நீட் தேர்வு மோசடி வழக்கில் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் தர வில்லை. இதனால் வழக்கு இன் னும் தொய்வாகவே உள்ளது என்று தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை தரப்பில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜ ராகி, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். தாலியைக்கூட கழற்றச் சொல்கிறீர்கள் இதனைக் கேட்டு கோபம டைந்த நீதிபதி, வழக்குப் பதிவு செய்து ஐந்து வருடம் ஆகிறது. இந்தியாவிலேயே இல்லாத மாண வனுக்கு மூன்று மாநிலங்களில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட் டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந் தால் கூட அவர்கள் தாலியைக் கூட கழற்றச் சொல்லி சோதனை செய்கி றீர்கள்.ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவ ணங்களை இதுவரை சிபிசிஐடி கேட்ட தகவலை நீட் தேர்வு நடத்து பவர்கள் வழங்கவில்லை. இதன் மூலம் குற்றவாளிகளுக்கு உடந் தையாக செயல்படுவது போல தெரிகிறது. நீட் தேர்வு முறைகேட்டில் குற்ற வாளிகளுக்கு ஆதரவாக செயல் படும் அதிகாரிகளின் வீடு அலுவல கங்களில் ஏன் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த நிலை தொடர்ந்தால் அவர் களை கைது செய்ய உத்தரவு பிறப் பிக்க நேரிடும் என எச்சரித்தார். ஒன்றிய அரசு தரப்பில் இறுதி யாக திங்கள்கிழமை அறிக்கை தாக் கல் செய்வதாக கால அவகாசம் கோரினர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி திங்கள்கிழமைக்கு ஒத்திவைத் தார்.