tamilnadu

img

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.24 கோடி மோசடி

சென்னை, நவ. 25 - மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி  வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர்  இந்து பெர்மனண்ட் பண்ட்’ நிதி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கா னோர் முதலீடு செய்திருந்தனர். இவர் களுக்கு நிறுவனம் தர வேண்டிய வட்டி, முதிர்வு தொகைகளை தராமல் இழுத்தடித்து வந்தது. இதனால்  பாதிக்கப்பட்டவர்கள் போராட்டக் குழு அமைத்து போராடி வருகின்ற னர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள் ளனர். முதலீட்டாளர்களிடம் 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர், சங்கர் ஆகிய  ஏழு பேருக்கு எதிராக  சென்னை பொருளாதார குற்றப்பிரிவு  காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் சம்பந்தப்பட்ட ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனண்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கக் கோரி முதலீட்டாளர்கள் நல சங்கத் தலைவர் எம். சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தேவநாதன் யாதவ் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில் நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததை வைத்து ஆதாயம் அடைந்துள்ளதாக கருதுகிறேன். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலையானால், தங்களது சொத்துக்களை விற்கக் கூடும். எனவே, அவர்களின் சொத்துக்களை முடக்கக் கோரி உள்துறை செயலாளரிடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன் மற்றும் மகிமை நாதன் மற்றும் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனண்ட் பண்ட்’ நிதி  நிறுவனம் உள்ளிட்டோரின் சொத்துக் களை தற்காலிகமாக முடக்க அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதி லளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.