tamilnadu

img

மந்தமயமாகும் உலகமயம் - கை சூல்ட்ஜ் ஸ்ருதி ஸ்ரீவத்சவா

* உலகளாவிய உற்பத்தியில் சீனா மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியை கொண்டுள்ளது.
*அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 45% உற்பத்தியை கொண்டுள்ளன.
* 2012 முதல் 2022 வரை தொழிற்சாலைகளில் ரோபோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
* வளர்ந்து வரும் நாடுகளின் பொது கடன் 29 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது (10 ஆண்டுகளுக்கு முன்பு $12 டிரில்லியன்).
* உலகம் முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
* உலகப் பொருளாதாரம் உற்பத்தியில் இருந்து சேவைத் துறைக்கு மாறி வருகிறது.
* குறைந்த கல்வியறிவு, மோசமான மின்சார வசதி மற்றும் பலவீனமான ஆட்சி முறை ஆகியவை வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.

உலகப் பொருளாதாரத்தின் இயங்கு சக்தியாக நீண்ட காலம் திகழ்ந்த உற்பத்தித் துறை, இனி அற்புத வளர்ச்சியை உந்தித் தள்ள முடியாத நிலையில் உள்ளது. கோவிட் தொற்றுக்குப் பிந்தைய பணவீக்கமும், உயர்ந்த வட்டி விகிதங்களும் எத்தியோப்பியா, பாகிஸ்தான் போன்ற கடன் சுமையில் சிக்கி யுள்ள நாடுகளை மேலும் நொடிப்பு நிலைக்குத் தள்ளியுள்ளன. அமெரிக்காவிற்கும் சீனா விற்கும் இடையேயான பதற்றங்கள் வர்த்தக முறைகளை மாற்றியமைத்து, பாதுகாப்புவாதக் கொள்கைகளுக்கு வித்திட்டுள்ளன. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பிருந்ததை விட உலகப் பொருளாதார உற்பத்தியில் தொழிற் துறையின் பங்கு இன்று குறைந்துள்ளது. பொருட்களின் உற்பத்தியில் சீனா மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ, ஜெர்மனி உள்ளிட்ட அடுத்த பன்னிரண்டு நாடுகள் கூடுதலாக 45  சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. இதனால் புதிதாக உற்பத்தித் துறையில் நுழைய விரும்பும் நாடுகளுக்கு இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் செல்வம் பெருகி வந்தாலும், அது இன்னமும் உற்பத்தியிலேயே கவனம் செலுத்துகிறது. எனவே அதன் 1.4 பில்லியன் குடிமக்கள் அடுத்த சில ஆண்டுகளில் பிற நாடுகளின் பொருட்களை அதிகம் வாங்க வாய்ப்பில்லை. “சீனாவின் சந்தை முன்பு போல் இல்லை, அவர்களே அனைத்தையும் உற்பத்தி செய்து கொள்கின்றனர்” என்கிறார் சர்வதேச ஐம்டி வணிகப் பள்ளியின் பொரு ளாதார நிபுணர் ரிச்சர்ட் பால்ட்வின்.

வங்கதேச அனுபவம்

டாக்காவிற்கு அருகே உள்ள ருபானா ஹக் என்ற உரிமையாளரின் ஆடைத் தொழிற்சாலை யில் நூற்றுக்கணக்கான பெண்கள் H&M, Pepe Jeans, Primark ஆகிய நிறுவனங்களுக்கு ஆடைகள் தைக்கின்றனர். டிஜிட்டல் பலகையில் உற்பத்தித்திறன் கண்காணிக்கப்படுகிறது. உரிமையாளர் ஹக், சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா மற்றும் ஜெர்மனியிலிருந்து ஜாக்குவார்ட் நெசவு இயந்திரங்களையும் பிற உபகரணங்களையும் வாங்கினார். இதனால் 3,000 தொழிலாளர்கள், அதாவது மொத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வேலையை இழந்தனர். இதேபோன்று 2023 முதல் 2025 வரை வங்கதேச தொழிற்சாலை களில் 80% வரை தானியங்கி இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. ஒவ்வொரு இயந்திரமும் ஆறு பேர் செய்யும் வேலையை செய்யும் திறன் கொண்டது.

எத்தியோப்பிய நெருக்கடி

2010களில் ஆப்பிரிக்காவின் வளர்ச்சி இயந்திரமாக கருதப்பட்ட எத்தியோப்பியா, இன்று பெரும் நெருக்கடியில் உள்ளது. சீனாவிடம் 7 பில்லியன் டாலர் கடன் வாங்கி 70 பெரிய திட்டங்களை செயல்படுத்தியது. ஜிபூட்டி நகருக்குச் செல்லும் ரயில் பாதை உள்பட பல உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று ரயில்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இயங்குகிறது. கூட்டம் இல்லை. 2018ல் இங்கு அபி அகமது பிரதமரான போது, அவர் ஒரு திறமையான தொழில்நுட்ப வல்லுநர் என்றும் நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வார் என்றும் நம்பிக்கை இருந்தது. ஆனால் அது வெறும் கற்பனை யாகவே போனது. 2020ல் டிக்ரே பிராந்தியத்தில் வெடித்த இனப்போர் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டன. அமெரிக்கா வர்த்தக சலுகை களை ரத்து செய்தது. சுமார் 5,000 உற்பத்தி நிறு வனங்களில் 450 நிறுவனங்கள் மூடப்பட்டன. வங்கதேசம், எத்தியோப்பியா ஆகியவை ஆசியா, ஆப்பிரிக்கா எனும் இருபெரும் கண்டங் களின் உண்மைநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் எனலாம்.

உலகளாவிய கடன் நெருக்கடி

வளர்ந்து வரும் நாடுகளின் பொதுக்கடன் கடந்த பத்தாண்டுகளில் 12 டிரில்லியன் டாலரில்  இருந்து 29 டிரில்லியன் டாலராக உயர்ந்துள் ளது. பல நாடுகள் கடன் தவணைகளை செலுத்த முடியாமல் உலக நிதி நிறுவனங்களிடம் நிவார ணம் கோருகின்றன. கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியம் ஏழை நாடுகளுக்கு 5.7 பில்லி யன் டாலர் கடன் வழங்கியது. இது கோவிட் தொற்றுக்கு முந்தைய சராசரியை விட நான்கு மடங்கு அதிகம்.

வர்த்தக போர் தாக்கம்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே யான வர்த்தக மோதல்கள் உலக ‘ஒழுங்கில்’ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உள்நாட்டு தொழில்களைப் பாதுகாக்க முன்னாள் வர்த்தக ஆதரவாளர்களே இப்போது ‘பாதுகாப்பு வாதத்தை’ கடைப்பிடிக்கின்றனர். கடந்த சில  ஆண்டுகளில் சீனப் பொருட்கள் மீதான வரி களை அமெரிக்கா 19.3% வரை உயர்த்தி யுள்ளது. சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது. டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேலும் வரிகள் விதிப்பதாக அறிவித்துள்ளார். 2024 ஏப்ரலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் பாதுகாப்புவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த பொருளாதார நட வடிக்கைகளை அறிவித்தன. இலக்கு மானி யங்கள், வரிச் சலுகைகள், வர்த்தகக் கட்டுப்பாடு கள் போன்ற நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் கடைப்பிடிக்கின்றன. உலகளவில் அரசாங்கங்கள் கடந்த ஆண்டு 2,500க்கும் மேற்பட்ட இத்தகைய கொள்கைகளை அறிமுகப்படுத்தின.

ரொமேனியாவின் வெற்றி

இந்நிலையில், பல்வேறு தொழில்துறை களில் முதலீடு செய்து வர்த்தக நெருக்கடிகளி லிருந்து தப்பித்துள்ளது ரொமேனியா. டாசியா ரெனால்ட் நிறுவனம் ஐரோப்பாவின் மிகப் பிரபலமான கார்களில் ஒன்றை உற்பத்தி செய்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டா வது பெரிய தானிய ஏற்றுமதியாளராக உள்ளது. டிலாங்கி, எலக்ட்ரோலக்ஸ், ஹையர் போன்ற வீட்டு உபகரண நிறுவனங்களும் இங்கு உற்பத்தி செய்கின்றன. “கடந்த சில தசாப்தங்களில் ரொமேனியா வின் மாற்றம் குறிப்பிடத்தக்கது” என்கிறார் அம்சாம் (AmCham) ரொமேனியா நிறுவ னத்தின் தலைவர் கிறிஸ்டியன் ஸ்போரிஸ். “திறமையான மனித வளம், போட்டித்தன்மை வாய்ந்த வரிகள், பெரிய உள்நாட்டு சந்தை, வளங்களுக்கான அணுகல் ஆகியவை முக்கிய நன்மைகளாக உள்ளன” என்கிறார். ஆனால், ரொமேனியாவின் மாடல், ஐரோப்பாவின் பிற நாடுகளில் கூட பிரதிபலிக்க வில்லை.

எதிர்கால போக்குகள்

உலகப் பொருளாதாரம் உற்பத்தித் துறையி லிருந்து விலகிச் செல்லும் நிலையில், வளர்ந்து வரும் நாடுகள் மேலும் பின்தங்கும் அபாயம் உள்ளது. 2023ல் யேல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சேவைத் துறைக்கு மாறிய விவசாயத் தொழிலாளர்கள் உற்பத்தித்திற னிலும் ஊதியத்திலும் முன்னேற்றம் கண்ட னர். ஆனால் இந்த நன்மைகள் “மிகவும் சமமற்றவை” என்றும், நகர்ப்புற செல்வந்தர்களுக்கே அதிகம் கிடைத்தன என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். உலகப் பொருளாதாரம் மந்தமடையும் நிலையில், பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துவதே வெற்றிக்கான வாய்ப்பாகத் தெரிகிறது. சில உற்பத்தி, சில சேவைகள், சில பாதுகாப்புவாதக் கொள்கைகள் என கலப்பு அணுகுமுறை தேவை. இருப்பினும், முன்பு போன்ற வேகமான பொருளாதார விரிவாக்கம் அரிதாகவே இருக்கும்.  “ஏணியில் ஏறுவது முன்பைவிட கடினமாக இருக்கும்” என்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

நெருக்கடியின் பிடியில் உலகமயம்

உலகமயமாக்கல் புதிய சவால்களை எதிர்கொள்கிறது. தானியங்கி மயமாக்கல், வர்த்தகப் போர்கள், கடன் சுமை, பாதுகாப்பு வாதம் போன்றவை புதிய இடர்களை உரு வாக்குகின்றன. பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி, புதிய சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்வ தே எதிர்கால வெற்றிக்கான வழியாகத் தெரி கிறது. ஆனால், முதலாளித்துவத்தின் லாப வேட்டை, இத்தகைய பாதையை அனுமதிக் குமா என்பது கேள்வியே! ‘புளூம் பெர்க் பிசினஸ் வீக்’ ஏட்டில் வெளியான கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.