திருநெல்வேலி, மே 26-சென்னை எக்மோரில் இருந்து விழுப்புரம்,திருச்சி, மதுரை,திண்டுக்கல், திருநெல்வேலி ,நாகர்கோவில்,திருவனந்தபுரம் வழியாக கேரளா மாநிலம் குருவாயூருக்கு தினமும் குருவாயூர்விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயில் பகல் நேரரயில் என்பதால் ஏராளமானோர் இதில் பயணிக்கின்றனர் அதோடு இந்த ரயிலில் சேர் கார் பெட்டிகள் அதிகம் இருப்பதாலும் பயண செலவும் குறைவு என்பதாலும் இந்த ரயிலுக்குநல்ல வரவேற்பு உள்ளது தற்போது கோடை காலம் என்பதால்இந்த ரயில் நிரம்பி வழிகிறது.இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தண்டவாளம் பராமரிப்பு என்ற பெயரில் இந்த ரயில் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை ரயில் நிலையத்தில் தினமும் ஒரு மணி நேரம்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் குடிநீர்வசதி,கேண்டீன் வசதி, முறையான பிளாட்பார்மின் மேற்கூரைகள் வசதிகள் என எந்த ஒரு வசதியும் இல்லாததால் இதில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர் அதோடுவெயில் நேரம் என்பதால் பயணிகள் கடும் புழுக்கத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.ஞாயிறன்று ஒரு மணி நேரம் தாண்டி ரயில் நின்றதால் பயணிகள் மேலும் அவதியடைந்தனர் எனவே ரயில்வே நிர்வாகம்துரித நடவடிக்கை எடுத்து ரயில் தாமதத்தை குறைக்க வேண்டும் என அதில் பயணம் செய்த நெல்லை மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.