பாலு வீட்டின் பின்புறம் உள்ள பெரிய தோட்டத்தில் கொய்யா, சப்போட்டா, மாதுளை, மா, பலா, வாழை, தென்னை, ரோஜா, முல்லை, மல்லிகை என வன மாகக் காட்சியளிக்கும். பார்ப்பவர்கள் அனைவரும் வியந்து போவார்கள். பெரும்பாலும் பாலுவே தோட்ட வேலை களைச் செய்து வந்தார். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பாலுவின் மகன் குமாரும் அப்பாவோடு சேர்ந்து தோட்ட வேலையில் ஈடுபடுவான். அவ னுக்குத் தோட்ட வேலை செய்வது மிக வும் பிடித்தமான ஒன்று. அவன் வைத்து வளர்த்த வெண்டைக்காய், கொத்தவரை, பீர்க்கை, அவரை, கீரை இவைகளை அவனே பரித்து சமையலுக்குத் தரு வான். வேறு யாரும் பறிப்பதை அவன் விரும்பமாட்டான். அவன் பயிரிட்ட காய்களில் செய்யப்படும் உணவில் தனிச் சுவையைக் கண்டான். விடுமுறை நாட்களில் கூட மாலை நேரத்தில்தான் நண்பர்களோடு விளை யாடுவான்.நாள் முழுதும் விளையாடுவது அவனுக்குப் பிடிக்காது.தொடர்ந்து பதினைந்து நாள்கள் பெய்த மழையால் குமார் தோட்டத்திற்குப் போகவில்லை.மழை விட்டபிறகு ஒரு நாள் அதிகாலைப் பொழுதில் தோட்டத்திற்குச் சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவ னைத் திகைக்க வைத்தது.அவன் வைத்தி ருந்த செடி, கொடிகளைச் சுற்றி ஏராள மாக புல், பூண்டுகள் முளைத்துக் காடாக இருந்தது.உடனே அந்தக் களைகளை எல்லாம் பிடுங்க ஆரம்பித்தான். பிடுங்கிய புல்லை எல்லாம் அவர்கள் வீட்டுப் பசு வான காவேரிக்கும் கன்றாகிய கண்ண னுக்கும் போடுவான்.அவைகள் குமாரைக் கண்டால் தன்னுடைய நாவினால் நக்கி மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும்.
கை,கால்களைச் சுத்தம் செய்து கொண்டு வீட்டில் வந்து அமர்ந்தான். அப்போது கையில் அரிப்பது போலத் தோன்ற அவ்விடத்தைச் சொறிந்து விட்டான்.சொறிந்த இடம் சிவப்பாகத் தண்டித்துப் போயிருந்தது.சிறிது நேரத் தில் உடல் முழுதும் அரிக்க ஆரம்பித்தது. சட்டையைக் கழற்றிப் பார்த்தான். உடல் முழுதும் சிவப்பு சிவப்பாகத் தண்டித்தி ருந்தது.பயந்துபோன குமார் அப்பாவிடம் காட்டினான். அதைப் பார்த்த அவன் தந்தையும் பயந்துபோனார். அவனுடைய அம்மாவும் வந்துவிட்டாள். சிறிது நேரத்தி லேயே “மயக்கம் வருகிறது” என்று சொல்லி சாய்ந்துவிட்டான் குமார். அவன் அம்மா விஜயா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள். அலறியடித்துக் கொண்டு பக்கத்து வீட்டு நண்பரிடம் செய்தியைச் சொன்னார் பாலு. அவர் உடனே தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்.மயக்க நிலையில் இருந்த குமாரைத் தூக்கி வந்து காரில் படுக்க வைத்தனர்.”தம்பி..அதிகாலை என்பதால் எந்த மருத்துமனை யும் திறந்திருக்க மாட்டார்கள்.மீனா கிளினிக்கில் இரவு நேர டாக்டர் இருப்பார் அங்கே போ”என்றார் பாலு. ஐந்து நிமிடத்திலேயே அங்கே போய்விட்டார்கள். அவர்கள் நினைத்தது போலவே இரவு நேர மருத்துவர் இருந்தார். குமாரை உள்ளே தூக்கிச் சென்றனர். உடனே குளுக்கோஸ் ஏற்றி சில ஊசிகளை யும் போட்டார். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. எந்த முன்னேற்றமும் இல்லை என்பதோடு நாடித்துடிப்பும் குறைந்து வந்தது. டாக்டருக்குப் பயம் வந்துவிட்டது” ஐயா..இது கொஞ்சம் சீரியசா இருக்கு, உடனே தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்”என்று சொல்ல பாலுவுக்கு பதட்டம் மேலிட்டது.
ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்துவிட்டு அதில் குமாரைப் படுக்க வைத்தனர். ‘மயி லாடுதுறையிலிருந்து தஞ்சாவூர் செல்ல எப்படியும் மூன்று மணி நேரமாகும்.அதற்குள் என்னவாகுமோ?’ பயம் தொற்றிக் கொள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநரி டம்” தம்பி பக்கத்தில் இருக்கும் தாமோ தரன் டாக்டரிடம் போ. அவர் திறமை யானவர் எப்படியும் சரிப்படுத்திவிடு வார்”என்றார் பாலு.. தாமோதரன் மருத்து மனைக்குப் போனார்கள். நல்ல வேளை யாக டாக்டர் இருந்தார்.ஓடிப்போய் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார். டாக்டர் ஆம்புலன்ஸ் நிற்கும் இடத்திற்கே வந்து பரிசோதித்தார். உடனே குமாரை உள்ளே தூக்கிவரச் சொல்லி விட்டு, இன்னொரு மருத்துவருக்குப் ஃபோன் செய்தார். அவரும் உடனே வந்துவிட்டார். இருவரும் கலந்து பேசிக்கொண்டு சிகிச்சையைத் தொடங்கி னர். ஒரு மணி நேரம் கழித்து குமார் கண் விழித்தான். குமாரின் தந்தை பாலு விற்குப் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. அதைவிட மருத்து வர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. டாக்டர் சொன்னார் ”உங்கள் மகனை எதோ கொடிய விஷப் பூச்சிக் கடித்திருக்கி றது. நீங்கள் தஞ்சாவூர் அழைத்துச் சென்றிருந்தால் ஒரு ஆறு கிலோமீட்டர் தூரத்திலேயே இறந்திருப்பான். நல்ல வேளையாக இங்கு வந்தீர்கள்.பிழைத்துக் கொண்டான்.ஒரு மூன்று நாளைக்கு நான் கொடுக்கும் மருந்தைக் கொடுத்து வாருங்கள் இனி பயம் இல்லை”என்று சொல்லிவிட்டு,காடு மண்டிப் போயிருக்கும் இடத்தைச் சுத்தப் படுத்தும்போது எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும் தம்பீ” என்று குமாரிடம் சொல்லி அனுப்பி வைத்தார்.