tamilnadu

img

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஜன. 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டில், கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தமிழக அரசியல் கட்சி களின் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவா ஹிருல்லா எம்எல்ஏ, தமிழக வெற்றிக்கழ கத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட தலை வர்களும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., பொதுச்செயலாளர் து. ரவிக்குமார் எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் வன்னி யரசு, ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு. ஜக்கையன் ஆகியோர், சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை நேரில் சந்தித்தும், சால்வை அணிவித்தும் தங் களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

மாநிலச் செயலாளர்  பணி சிறக்கட்டும்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் பெ.சண் முகம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறோம். தோழர் சண்முகம் அவர்கள், மலைவாழ் பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்கள் - விவ சாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் நலனுக்கு உழைத்ததற்காக தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர். சிபிஐ(எம்) தமிழ் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்கும் அவர்களின் பணி சிறக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளின் பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்குவார்’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டின் நிறைவாக 81 உறுப்பினர்கள் கொண்ட மாநிலக்குழு வும், 15 உறுப்பினர்கள் கொண்ட செயற் குழுவும் தேர்வு செய்யப்பட்டு மாநிலச் செய லாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப் பட்டுள்ளார். பெ. சண்முகம் மாணவப் பருவத்தில் இருந்தே அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருபவர். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் பொறுப்பில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவர். பயிர் வாரியாக, பாசன வாரியாக விவசாயிகள் அமைப்பு கள் செயல்பட்டு வரும் சூழலில் கூட்ட மைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி செயல்பட்டு வருபவர். ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் நலனுக்காக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திலும் பங்கேற்று செயல் பட்டவர். வாச்சாத்தி பகுதியில் பழங்குடி மக்கள் ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் அரங்கேற்றிய அடக்குமுறை க்கு எதிராக போராடுவதில் அப்பகுதி மக்க ளை அணிதிரட்டி வழிநடத்தியவர். சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதில் முக்கிய பங்களிப்பு செலுத்தியவர். அரசியல் தளத்திலும் இடைவிடாமல் இயங்கி வரும் தோழர் பெ.சண்முகம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு  செய்யப்பட்டுள்ளார். இடதுசாரி, ஜனநா யக, மதச்சார்பற்ற, சமூகநீதி ஜனநாயக சக்திகளை பரந்துபட்ட ஒற்றுமை உருவாக்குவதில், அவர் மேலும், மேலும் வெற்றி பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இரா. முத்தரசன் குறிப்பிட் டுள்ளார்.

மதச்சார்பற்ற கூட்டணி வலிமை பெறும்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி யில், “தமிழ் மாநில மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாள ராக நியமிக்கப்பட்டுள்ள பெ. சண்முகம் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார வாழ்த்துகிறேன். மாணவர் பரு வம் முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து  செயல்பட்டவர். பாதிக்கப்பட்ட விவசாயப் பெருங்குடி மக்கள், மலைவாழ் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி நீதியைப் பெற்றுத்தந்தவர்.  புதிதாக தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெ. சண்முகம் அவர்களின் இயக்கப் பணிகளின் மூலம் தமிழகத்தில் இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெறும். இதுவரை பொறுப்பு வகித்து வந்த கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலிமை பெற செயல்பட்டவர். தேர்தல் களத்தில் இந்தியா கூட்டணி வெற்றிபெற கடுமையான பங்களிப்பை அளித்தவர். அவருக்கும் எனது பாராட்டுகளை தெரி வித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள் ளார். ஓ. பன்னீர்செல்வம் “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அவரது பணி சிறக்க எனது நல்வாழ்த்து கள்” என்று முன்னாள் முதல்வர் ஓ.  பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள் ளார்.

பெ. சண்முகம் தேர்வு மகிழ்ச்சியளிக்கிறது

“இந்திய பொதுவுடைமைக் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பெ. சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள் கிறேன். பட்டியலினத்தைச் சேர்ந்த  ஒருவர் முதன்முறையாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எளிய குடும்பத்தில் பிறந்து போராட்டத்தையே வாழ்க்கை யாகக் கொண்ட பெ. சண்முகம் அவர்கள் சமரசமின்றி இடதுசாரிக் கொள்கைகளை கடைபிடிக்கவும், இயக்கத்தை வளர்க்க வும் வாழ்த்துகள்!” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

போராட்டத்தில் முன்னிற்பவர்

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ள பெ. சண்முகத்தின் பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின் றோம்.  தனது இளம் பருவம் முதல் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட பெ. சண்முகம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர். விவசாயிகளின் உரிமைகளை மீட்க தொடர்ச்சியாகப் போராடி வருபவர்.  இந்தியா கூட்டணியின் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வல்ல ஒரு சிறந்த தோழருக்கு கிடைத் துள்ள இந்த வாய்ப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

போற்றுதலுக்குரிய பணி தொடரட்டும்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ. சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு  போராட்டங்களை முன் னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரச மின்றித்  தொடரட்டும்” என்று கூறியுள்ளார்.