சென்னை, பிப்,17- வண்ணம் சேர்த்து தயாரித்து விற்கப்படும் பஞ்சு மிட்டாய்க ளுக்கு தமிழக அரசு தடைவிதித் துள்ளது. சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பலரும் வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும் மெல்லிய இழையிலான பஞ்சு மிட்டாயை விரும்புவர். சர்க்கரை யும், நிறமியும் மட்டுமே உள்ள பஞ்சு மிட்டாயில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்ட நிலையில், பஞ்சு மிட்டாய் களை சோதனை செய்து பார்த் துள்ளனர். அதில் ரோடமைன்-பி (RHODAMINE - B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள் ளது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. பஞ்சுமிட்டாயை பிங்க், ரோஸ், மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் மாற்றுவதற்காக சேர்க்கப்பட்ட ரோடமைன்-பி என்ற வேதிப் பொருளால் புற்றுநோய் உண் டாக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப் படும் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதி காரி சதீஷ்குமார் பஞ்சுமிட்டாய் பகுப்பாய்வு சோதனைக்காக அனுப்பிருந்ததாகவும், அந்த சோதனைகள் முடிவில் ரோட மைன் பாசிட்டி பி என்ற வேதிப் பொருள் கலக்கப்பட்டுள்ளது
உறுதியானதாக தெரிவித்திருந் தார். இதைத் தொடர்ந்து, மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்ணம் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப் படும் பஞ்சு மிட்டாய்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கபட் டுள்ளதாக உத்தரவை வெளியிட் டிருந்தார். இந்த உத்தரவு தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற் பனையாளர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் கூறுகையில், வண்ணம் சேர்க்கப்பட்டு தயாரித்து விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். சர்க்கரை பயன் படுத்தி தயாரித்து விற்கப்படும் வெள்ளை பஞ்சு மிட்டாய்களை விற்பனையாளர்கள் விற்பனை செய்யலாம் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், வண்ணம் சேர்க்கப் பட்டு விற்பனை செய்யும் பஞ்சு மிட்டாய்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு உணவு பாது காப்புத் துறை சார்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், முடிந்த வரையில் குழந்தைகளின் பெற்றோரும் இது போன்ற உணவுப் பொருட்களை குழந்தை களுக்கு வாங்கித் தருவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.