தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் தரமான ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினம்தோறும் வந்து செல்கின்றனர். பாரம்பரிய சிகிச்சையுடன் நவீன வசதிகளை கொண்டுள்ள இம்மருத்துவமனை 135 ஆண்டுகால ஆயுர்வேத பாரம்பரியத்துடன் சிகிச்சைகள் அளிப்பதுடன் கற்பிப்பதிலும் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.
1889 அக்டோபர் 18 அன்று திருவி தாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் ராம வர்மா நிறுவிய இந்தியாவின் முதலாவது ஆயுர்வேத கல்வி நிறுவனம் இதுவாகும். ஆயுர்வேத மருத்துவ மாணவர்களுக்கு நடை முறை பயிற்சி அளிப்பதற்காக 8 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனையும் மருந்து உற்பத்தி மற்றும் பயிற்சி அளிக்கும் ஒரு மருந்தகமும் முதலில் துவக்கப்பட்டன. தற்போதுள்ள மருத்துவமனை மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு 1952 செப்டம்பர் 12 அன்று ஸ்ரீ சித்திரை திருநாள் பாலவர்மா அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவு பெற்று 1957 ஆகஸ்ட் 14 அன்று அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிர சாத் திறந்து வைத்தார். அதே இடத்தில் 160 படுக்கைகளுடன் புறநோயாளிகள் பிரிவும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 1962 முதல் ஐந்தரை ஆண்டு கால படிப்பான ஆயுர்வேத பட்டப்படிப்பு துவக்கப்பட்டது.
474 படுக்கைகளுடன்...
1971 இல் ஆயுர்வேதப் பட்டதாரிகளுக் காக, பொது மருத்துவம், இஎன்டி, பஞ்ச கர்மா. கிளினிக்கல் பார்மகாலஜி போன்ற பிரிவுகள் துவக்கப்பட்டன. 1979 முதல் சிசி ஐஎம் திட்டத்தின் படி, பிஏஎம்எஸ், பாடப்பிரி வும், 1998 முதல் சுமார் 11 பிரிவுகளில் பட்ட மும் 2019 முதல் எட்டு பிரிவுகளில் டிப்ளமோ பிரிவும் நடத்தப்படுகிறது. தற்போது சுமார் 474 படுக்கைகளுடன். ஆயுர்வேத சிகிச்சை யில் அனைத்து பிரிவுகளிலும் நவீன வசதி யுடன் கூடிய இந்த மருத்துவமனை, இந்தியா விலேயே மிகப்பெரிய ஆயுர்வேதக் கல்வி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. மூன்று வளாகங்களாக விரிவடைந் துள்ள நிறுவனத்தின் முக்கிய வளாகம் திரு வனந்தபுரத்தின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளது. ஆண்கள், பெண்கள் என தனித்தனி வார்டுகள், கட்டண வார்டுகளில் 464 உள்நோயாளிகள், ஆண்டு முழுவதும் சிகிச்சை பெறுகிறார்கள். புறநோயாளிகள் பிரிவில் பொது மருத்துவம், மர்ம ஏனோ ரேட்கள், நேத்ர இஎன்டி, பல் மருத்துவம் போன்றவற்றுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரையும் ஞாயிற்றுக்கிழமை பொது மருத்துவ புறநோயாளிகள் என தினமும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறப்புச் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.
இ மருத்துவமனை நிர்வாகம்
பொது நோயாளிகள் முன்பதிவு நிர்வாகம், ஆய்வகச் சேவைகள், மருந்தகம் போன் றவை கணினிமயமாக்கப்பட்டு 2014 - 2015 முதல் மருத்துவமனை நிர்வாகமாக நடை பெற்று வருகிறது. தற்போது பிரதான மருத்து வமனையில் சுமார் நான்கு முக்கியப் பிரிவு களில். புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. மருத்துவ மேற்படிப்பு மாண வர்கள் ஆராய்ச்சி படிப்புக்காக பதிவு செய்யப்பட்ட சிறப்பு புறநோயாளிகள் பிரிவும் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை அரிய வகை நோய்களுக்கான பல்வேறு சிறப்பு புறநோயாளிகள் பிரிவும் செயல்படுகிறது. ஆயுர்வேதப் பிரிவு மட்டுமல்லாது அதி நவீன வசதிகள் கொண்ட அலோபதி சிகிச்சை இடம்பெற்றுள்ள பல் மருத்துவப் பிரிவும் இங்கு செயல்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவும் இங்கு உள்ளது. நோயாளிகளுக்கு தேவையான மருந்து உற்பத்தி செய்து விநி யோகிக்கும் மருந்தகமும் மருத்துவமனை யுடன் இணைந்து செயல்படுகிறது. ஆண் களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வசதி கள் கொண்ட. பஞ்சகர்மா தியேட்டரும் புற நோயாளியாக வருவோருக்கு சிகிச்சை அளிக் கத்தக்க பஞ்சகர்மா அரங்கும் இங்கு உள்ளது. எலக்ட்ரோலஜிக்கல், அனலைசர்கள், ஆட்டோமேட்டட் பயோ கெமிஸ்ட்ரி அன லைசர், இம்முனாலஜிக்கல் அனலைசர் போன்ற செயல் திறன் மிக்க மிகவும் பய னுள்ள உபகரணங்கள் இங்குள்ள உயிரி ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
நவீனக் கருவிகள்
இதுமட்டுமின்றி ராஜீவ் காந்தி சென்டர் ஃபார்பயோ டெக்னாலஜியின் (RGCB) மாதிரி சேகரிப்பு மையமும் இங்கு செயல்பட்டு வரு கிறது. தற்போது மருத்துவமனை, ஆய்வ கத்திற்கு வரும் சிறப்பு, ஆய்வுகள் சேவை, ஆர்ஜிசிபி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் படுகிறது. மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே உடன் இணைந்த ரேடியோ லஜி யூனிட்டும் அல்டோ சோனோ கிராபி யும் எலக்ட்ரோ கார்டியோ கிராபியும் செயல் பாட்டில் உள்ளது. உள்நோயாளிகளுக்கும் புறநோயாளிகளுக்கும் 2020 அக்டோபர் முதல் கோவிட்-19 மாதிரி கலெக்சன் சென்டர் (ஆர்டிபிசிஆர் டெஸ்ட்) இந்த மருத்துவமனை யில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் ஒரு கோவிட்-19 வேக்சினேசன் (தடுப்பூசி) மையமும் செயல் படுகிறது. திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்து வக் கல்லூரியின் பூஜப்புரா வளாகத்தில் பஞ்சகர்மா மருத்துவமனை செயல்படுகிறது. பஞ்சகர்மா, மூச்சு திணறல், விஷத்துக்கான சிகிச்சை ஆகிய மூன்று பிரிவுகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஓல்ட் பிளாக், KHRWS Pay Ward, நியூ பிளாக் ஆகிய மூன்று இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில். காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையும் இங்கு உண்டு. அதிநவீன வசதி கொண்ட பரி சோதனை கூடம், பிசியோதெரபி, முதியோ ருக்கான சிறப்பு புறநோயாளி உள்நோயாளி பிரிவுகள் இங்குள்ளன. வாழ்வியல் முறை நோயான நீரிழிவு, மன அழுத்தம் போன்ற வற்றுக்கு புறநோயாளியாகவும் உள்நோயா ளியாகவும் இங்கு சிகிச்சை பெறலாம். திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேத கல்லூரி யில் இணை நிறுவனமாக பூஜப்புராவில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான மருத்துவமனையில் ஆயுர்வேத அலோபதி சிகிச்சைகள் அளிக்கப்படு கின்றன. மருத்துவ மேற்படிப்பு மாணவர் களுக்கான சிறப்புப் பிரிவுகளாக ஆயுர்வேத கைனகாலஜி, குழந்தைகள் சிகிச்சை பிரிவுகள் இங்கு செயல்படுகின்றன. சுமார் 70 ஆண்டுகளாக செயல்படும் பாரம்பரியம் உள்ள இந்த மருத்துவமனையில் ஆயுர்வேத பிரிவில் 80 படுக்கை வசதிகள், அலோபதியில் 20 பிபி யூனிட்டில் 6 என 106 படுக்கை வசதிகள் உள்ளன. நவீன முறை யில் அமைக்கப்பட்ட. அறுவை சிகிச்சை அரங்கு, லேபர் ரூம் போன்ற வசதிக்கு இங்கு உள்ளன. திங்கள் முதல் சனி வரை காலை 8 மணி முதல் ஒரு மணி வரை புறநோயாளி கள் பிரிவு செயல்படுகிறது. ஆயுர்வேத கல்வி, சுகாதார ஆராய்ச்சி, சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் முன்மாதிரியாக விளங்குகிறது. ஆண்டுதோறும் லட்சக்க ணக்கான மக்களுக்கு ஆயுர்வேதத்தின் பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புக்கு: 04712460823