tamilnadu

img

அரசு புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்குக!

அரசு புறம்போக்கில் குடியிருக்கும்  அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்குக!

சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி, மே 6 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் நூறு நாள் வேலையை தொடர்ந்து, சட்டப்படி நூறு நாட்களும் ஒரு குடும்பத்திற்கு வேலை வழங்கிட வேண்டும். நிலுவையில் உள்ள சம்பள  பாக்கியை உடனே வழங்க வேண்டும்.  விளக்குடியில் நத்தம் வகைப்பாட்டில் பட்டா வாங்கிக் கொண்டு ஆக்கிர மித்துள்ள இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகை புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடி மனை பட்டா வழங்க வேண்டும் என  கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் டி.வி.காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் நிகழ்ச்சியை துவக்கி  வைத்து ஒன்றிய-மாநில அரசுகளை  கண்டித்து, மக்களின் அடிப்படை பிரச்ச னைகளைப் பற்றி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே.ஜி.ரகுராமன், கே.பி.ஜோதிபாசு, நகர்மன்றத் துணைத் தலை வர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்ன நடந்த சமாதான பேச்சு வார்த்தையில், காவல் ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் யுவராஜ்,  வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வ நாயகி, மண்டல துணை தாசில்தார்  ஜோதிபாசு, ஆகியோர், ‘கோரிக்கை களை விரைவில் நடைமுறைப்படுத்து வதாக’ உறுதி கூறினர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் போராட் டத்தை நிறைவுரையாற்றினார்.