கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசு பொருட்காட்சியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.