tamilnadu

img

மார்ச் 19 இல் அரசு ஊழியர்கள் மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம்

மார்ச் 19 இல் அரசு ஊழியர்கள் மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் 

தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் பொன்விழா ஆண்டு, மாவட்ட மாநாடு சனிக்கிழமை, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட திட்ட அலுவலக கண்காணிப்பாளர் பா.விநாயகம் தலைமையில் நடைபெற்றது.  சமூக நல விரிவாக்க அலுவலர் மகாராணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் ச.சசிகலா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலத் தலைவர் ரவி  துவக்கவுரையாற்றினார்.  மாநிலச் செயலாளரும், மாவட்டப் பொறுப்பாளருமான பா. வெற்றிவேல்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ப.குமரிஅனந்தன், மாவட்டச் செயலாளர் சி.சுப்ரமணியன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் த.கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் க. துரைசிங் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நிறைவுரையாற்றினார். தமிழக முதல்வரின் தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மார்ச் 19 அன்று நடத்தும் மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் முழுமையாக பங்கெடுப்பது, துறை மறு சீரமைப்பின் போது மாவட்ட அளவில் நிர்வாக அலுவலர் பணியிடமும், வட்டார அளவில் இளநிலை நிர்வாக அலுவலர் பணியிடம் வழங்குதல், அலுவலர் முதல் அடிப்படை பணியாளர் வரையிலான காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்பார்வையாளர் செ.ஜெயா நன்றி தெரிவித்தார்.