tamilnadu

img

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.2 கோடியில் தங்கம் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 10- திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி  மதிப்பில் தங்கம் பறிமுதல் செய்யப்பட் டது. சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் புதனன்று அதி காலை திருச்சி வந்தது. அந்த ரயிலில் இருந்து பெரிய பைகளுடன் சிவப்பு டீ  சர்ட் அணிந்த ஒருவர் இறங்கினார். அவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.  அப்பொழுது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.பிறகு அவ ரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்  அவர் மதுரையை சேர்ந்த லட்சுமணன் என தெரியவந்தது. அவரது பையில் புதிய  தங்க நகைகள் பல இருந்தன. இது போல  ரொக்கப்பணமும் கட்டுக்கட்டாக இருந் தது. தங்க நகைகள், பணம் ஆகியவற் றின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும்  என தெரிகிறது. இந்த நகைகள் , நகைக்  கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்டதா, நகைகளை கடைகளில் சப்ளை செய்து விட்டு வசூலித்து வைத்தி ருந்த பணமா என்பது குறித்தும், பணம், நகைகள் யாருக்கு செல்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.