tamilnadu

img

தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியைத் தருக!

புதுக்கோட்டை, மே 25-  தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தமிழகத்திற்குச் சேரவேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியைத்தந்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள உதவுவாரா என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மே 24, 25 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதனையொட்டிய புதன்கிழமையன்று கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இன்றைய அரசியல் சூழல் மக்களின் வாழ்வாதாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  மத்திய அரசு 17 முறை விலைகளை உயர்த்திவிட்டு 2 முறை மட்டுமே குறைத்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலையில் ரூ.10, ரூ.8 என்கிற சிறு அள வில்தான் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலக்கப்படுகிறது. இத னால், குறைக்கப்பட வேண்டிய விலை யை நுகர்வோருக்குத் தராமல் பெட்ரோலிய நிறுவனங்கள் கொள்ளை யடிக்க மோடி அரசு அனுமதித்துள்ளது.  மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள வரி உயர்வுகளையும், நாசகரக் கொள்கைகளையும் திரும்பப்பெற வலியுறுத்தி மே 25 முதல் வருகின்ற 31- வரை இடதுசாரிக் கட்சிகள் மற்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து மக்களிடையே பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நடத்தவுள்ளோம்.

பஞ்சு செயற்கையான பற்றாக்குறை

ஒரு கெண்டி பருத்தியின் விலை வெறும் 35 ஆயிரம் என்று இருந்ததை 1 லட்சத்து 18 ஆயிரம் என்கிற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. செயற்கையாக மார்க்கெட்டில் பற்றாக்குறையை உருவாக்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு மோடி அரசு துணைபோகிறது. இதனால், பல்வேறு நூற்பாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி யுள்ளார். மக்களவை உறுப்பினர் கனிமொழி ஜவுளித்துறை அமைச்சரை  நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.  ஆனாலும், நடவடிக்கை இல்லை. அதிக மான நூற்பாலைகள் தமிழ்நாட்டில் இருப்பதை குஜராத்துக்கு மாற்றும்  நடவடிக்கைகளில் மோடி ஈடு பட்டுள்ளாரோ என்கிற சந்தேகம் வரு கிறது. இந்திய பருத்திக் கழகம் மூலம்  ஒன்றிய அரசு நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும். பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு  வருவதன் மூலம் சில திட்டங்கள் தொடங்கப்படும் என்பது நல்லதுதான். அதே நேரத்தில் ஒன்றிய அரசு தமிழ கத்திற்கு சேரவேண்டிய சுமார் 28 ஆயி ரம் கோடி ரூபாய் நிதிப் பாக்கித்தொகை யை தரும் பட்சத்தில் தமிழகத்தில் ஏராள மான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க  முடியும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா பொருட்களின் மீதான விலை உயர்வும், வேலை இல்லாத் திண்டாட்டமும் உயர்ந்துகொண்டே வருகிறது. மக்களின் மீதான இக்கொடூரத் தாக்குதலைக் கண்டித்து பாஜக அல்லாத கட்சிகள் வலுமிக்க போராட்டத்திற்கு முன்வர வேண்டும்.

மேட்டூர் அணை

இயற்கையின் ஒத்துழைப்பால் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண் டிய மேட்டூர் அணை மே 24லிலேயே  திறக்கப்பட்டுள்ளது. ஆனால், தூர்வாரும் பணிகள் தொய்வடைந்துள்ளது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணி களை விரைந்து முடிக்க வேண்டும். தண்ணீர் மட்டும் திறந்துவிட்டால் போதாது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக போதுமான அளவு கடன், விதை மற்றும் இடுபொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் 50 ஆண்டுகால கனவு காவிரி, குண்டாறு திட்டம். இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும்  புதுக் கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருது நகர் மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்  கும். இதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

கந்துவட்டிக்கொடுமை

கந்துவட்டிக் கொடுமையால் அவிநாசியில் பெண் தற்கொலை செய்துகொண்டது மிகுந்த  வேதனைக்குறியது. பொதுத்துறை வங்கிகளும்,  கூட்டுறவு நிறுவனங்களும் போதிய அளவில் சாமானிய மக்களுக்கு கடன்கொடுக்க மறுப்பதே இதற்குக் காரணம். இதனால், கந்துவட்டிக்காரர் களிடமும், நுண்நிதி நிறுவனங்கிடமும் மக்கள் சிக்கி சீரழிந்து வருகின்றனர். மேற்படி தற்  கொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு கந்துவட்டி தடைச்சட்டத்தை அரசு உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும். பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு பாது காப்பில்லாத 30 நாடுகளின் பட்டியலில் இந்தியா வும் உள்ளது. தனியார் நிறுவனத்தின் புகாரைப் பெற்றுக்கொண்டு ஜூனியர் விகடன் பத்திரிகை மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத் தக்கது. 

அரசு இ-சேவை மையங்கள் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஏராளமான சேவைகளை செய்து வருகின்றன. இணைப்பு என்கிற பெயரில் அவற்றை படிப்படியாக மூடும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துவருவது சரியல்ல. அவை தொடர்ந்து இயங்குவதற்கும், அதில் வேலை செய்யும் ஊழியர்களை பாதுகாப்பதற்கும் அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு படிப்படியாக குறைத்து வருவது உண்மைதான். அதேநேரத்தில் இங்கு பெரும்பாலான ஊராட்சிகளில் முறைகேடுகள் பெரிய அளவில் நடைபெறுகிறது. 50 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு 100 பேருக்கு கணக்கு எழுதும் போக்கு உள்ளது. அரசு வெறும் பார்வை யாளராக இருக்கக்கூடாது. முறைகேடுகளை சரி செய்ய வேண்டும்.

மின் கொள்முதல் விலையைக் குறைத்திடுக!

மின்சாரத்துறையைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்ததைத் தான் திமுக அரசும் செய்கிறது. மின்சார வாரியம் செலவுசெய்யும் 66 ஆயிரம் கோடி ரூபாயில் சுமார் 40 ஆயிரம் கோடியை வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்குவதற்கே போய்விடுகிறது. அரசு  புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க வேண்டும். இதர மாநிலங்களைப் போல மின் சாரம் வாங்குகின்ற தனியார் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொள்முதல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை நாளுக்குநாள் அதிகரித்து வருவ தாக சபீதா பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரி விக்கிறது. ஆணாதிக்க மனோபாவமும், போதைப் பழக்கமுமே இதற்குக் காரணம். இது குறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்  டும். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படி யாக குறைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய  மதிப்பளிக்க வலியுறுத்தி வீடு வீடாகச் சென்று ஆண்களிடம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும். வருகின்ற ஜூன்மாதம் கடைசியில் இதுதொடர்பாக சென்னையில் மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், செய்தியாளர்களின் பல்வேறு கேள்வி களுக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், 

“தமிழக அரசு தவறு செய்தால் சுட்டிக்காட்ட வும், தேவைப்பட்டால் போராட்டங்களை நடத்த வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும்  தயங்கியதில்லை. ஆயிரம் மடங்கு மோசமான நட வடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. 1300 ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளது உள்ளிட்ட ஏராளமான சான்றுகளை கூறமுடியும். அயோத்தி யைத் தொடர்ந்து வாரணாசியிலும் மசூதியை இடிக்கும் நடவடிக்கைகளை பாஜக எடுத்து வரு கிறது. வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் மதவெறி அரசியலை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை திமுகவுடன் இணைந்து எங்களின் போராட்டம் தொடரும். காங்கிரசுக்கும் எங்களுக்கும் பொருளாதாரக் கொள்கையில் முரண்பாடு உள்ளது. சொல்லப்  போனால், இத்தகைய மோசமான பொருளா தாரக் கொள்கையை தொடங்கி வைத்ததே காங்கி ரஸ்தான். மதவெறி எதிர்ப்பு என்கிற நிலையில் தமிழகத்தில் காங்கிரசுடனும் இணைந்து செயல் படுகிறோம் என்று விளக்கினார்.”

மேலும், “பேரறிவாளன் விடுதலையானது வர வேற்கத்தக்கது. அதே நேரத்தில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல. தவறுக்கு உரிய தண்டனை பெற்றபிறகுதான் அவர் விடுதலை செய்யப் பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை பேரறிவாளன் விடுலையைத் தாண்டி மாநில அரசின் உரிமை நிலைநட்டப்பட்டுள்ளது என்பதே சிறப்பம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக பொறுப்பேற்று ஓராண்டில் ஏராளமான சாவல்களை சந்தித்துள்ளது. கொரோனா அலை களை எதிர்கொண்டது. சென்னையில் வெள்ளம், புயல் சேதம், பெருமளவிலான பொருளாதார நெருக்கடிகளை தாண்டி பல்வேறு ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை வர வேற்கிறோம். அதே நேரத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000, அரசு ஊழியர்களுக்கு பழைய  ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்து ஊழியர் களுக்கு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, ஓய்வு காலத் தில் கிடைக்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட  கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென  வலியுறுத்துகிறோம்.” என்றும் கே.பால கிருஷ்ணன் குறிப்பிட்டார்.  பேட்டியின்போது, அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பி னர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

(ந.நி)

 

;