அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி உடனே ஒப்புதல் அளித்திடுக : சிபிஎம்
சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி யின்றி ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: ரம்மி உள்ளிட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் காரண மாக பணத்தை இழந்து தமிழகத்தில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந் துள்ளனர். இன்னும் பலர் தங்களின் சேமிப்பு பணம், சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலை யில், ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டின் பாதகமான விளைவுகளின் பின்னணியை ஆய்வு செய்யவும், அதனை ஒழுங்குபடுத்த ஆலோச னைகள் கோரியும் நீதிபதி கே. சந்துரு தலைமையில் நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழு விசாரித்து அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துதல் சட்ட முன்வடிவை ஒருமனதாக நிறை வேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆளுநர் சில சந்தே கங்களை கேட்டபோது, அரசின் தரப்பில் சட்டத்துறை அமைச்சர் நேரில் சென்று விளக்கமளித்தார்.
பல மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்து விட்டு 06.03.2023 அன்று ஆளுநர் மசோதா வை திருப்பி அனுப்பி வைத்தார். ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளை யாட்டினுடைய நிர்வாகிகள் ஆளு நரை நேரடியாக சந்தித்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ள பின்னணி யில், ஆன்லைன் ரம்மி தடை மசோ தாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார் என கருத வேண்டி யுள்ளது. ஆளுநரின் இந்த நட வடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஜன நாயக இயக்கங்களும், பொதுமக்க ளும் வலுவான கண்டனக் குரலை எழுப்பியதோடு, பல்வேறு போராட்ட ங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதிலளித்த தகவல்- ஒளி பரப்புத்துறை அமைச்சர், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மசோதா வை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேர வையில் முதலமைச்சர் மார்ச் 23 அன்று தாக்கல் செய்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள் ளது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக நின்று செயல்படுவது வரவேற்கத்தக்கது. எனவே, ஆளுநர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி இனியும் காலம் தாழ்த்தாமல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்பு தல் அளிக்க வேண்டும் என்றும் தேசிய அளவில் இத்தகைய சட்டம் கொண்டுவர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வற்புறு த்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன் லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆட்சிமாற்றத்திற்கு பிறகு, திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட மசோதா வுக்கு கடந்த ஆண்டு அக்.1 அன்று ஆளு நர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அக். 19 அன்று சட்டப்பேர வையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப் பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுதொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பதில் அளித்தது.
சில மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி அம்மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறும்போது, ‘‘ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளு நருக்கு அனுப்புவோம். இரண்டாவது முறையாக அனுப்பும்போது, அதை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை வியாழனன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தாக்கல் செய்தார். ஆளும் கூட்டணி கட்சித் தலைவர்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் முழு ஆத ரவு அளித்து பேசினர். இதனைத் தொட ர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப் பட்டது.