tamilnadu

img

மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு முழுஊரடங்கு நீட்டிப்பு...

மதுரை
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்பை சந்தித்து வரும் மதுரையில் கொரோனா பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஜூன் 24  ஆம் தேதி முதல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிள், திருப்பரங்குன்றம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் ஜூலை 12 வரை (2 கட்டமாக) முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த முழுஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மேலும் 2 தினங்களுக்கு அதாவது ஜூலை 14-ஆம் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 111 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;