tamilnadu

img

சுண்டெலியின் நண்பர்கள்

அது ஒரு விவசாயி வீடு.வீடு ஒரு கிராமத்தில் இருந்தது. கிராமம் டவுனை விட்டு ரொம்பத் தள்ளி இருந்தது.  வீட்டைச் சுற்றிச் சின்னத் தோட்டம் இருந்தது.  ஒரு காளை மாடு, ஒரு ஆடு,ஒரு கோழி... மூன்றையும் விவசாயி தோட்டத்தில் வளர்த்தார். கூட ஒரு சுண்டெலியும் அவர்களுடன் சேர்ந்து கொண் டது.நாலும் நண்பர்களாக இருந்தன. விவசாயி மாட்டுக்குத் தீவனம் வைப்பார். ஆட்டுக்குத் தழை ஒடித்துப் போடுவார். கோழிக்குத் தானியம் வீசுவார். எலிக்கு எதுவும் கிடையாது.  கோழிக்குப் போடும் தானியத்தை எலி எடுக்க வந்தால் விவசாயி கம்பெடுத்து விரட்டுவார்.பட்டினி கிடக்க முடியுமா?  யாருக்கும் தெரியாமல் எலி நைசாய் அடுப்படிக்குப் போகும்.  கிடைத்ததைக் கொறித்து விட்டு ஓடி வந்து விடும்.  நேற்று இட்லி. இன்று வடை. தினம் வீட்டுக்கார அம்மா சத்தம் போடுவார். “சீ இந்த எலி படுத்துறபாடு! ஒரு நாளைக்கு மண்டையில போடணும்!”  ஆனால் எலி அவர் கையில் சிக்கவே இல்லை.  ஒருநாள் -அடுப்புக்குப் போன எலி அதிர்ச்சி அடைந்தது.  எந்தப் பண்டமும் வெளியே இல்லை. அலமாரிக்குள் வைத்து மூடி விட்டார்கள். புதுசாய் ஒர் எலிப்பொறி இருந்தது. அதற்குள் ஒரு வடை தொங்கிக் கொண்டு இருந்தது. வடை தின்ன ஆசை. ஆனால் உள்ளே போனால் மாட்டிக்கொள்ள வேண்டும்.  என்ன அநியாயம்? எலி பொருமியது.  இந்த அநியாயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும்.  வெளியே ஓடி வந்தது. காளையிடம் போனது.  “என்னைப் பிடிக்க ஒரு பொறி வாங்கி வச்சிட்டாங்க. தப்பிக்க ஏதாவது யோசனை சொல்லு” என்று சுண்டெலி காளை யிடம் கேட்டது. காளை கண்டு கொள்ளவே இல்லை.  ‘அதனால் எனக்னென்ன?” என்று காளை கேட்டது.  

ஆடு கோழிகளும் கண்டு கொள்ளவில்லை.  ‘அது உன் பிரச்சனை. உன் பாடு!” என்று சொல்லிவிட்டன.  சுண்டெலிக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது.  அடுப்படிக்குப்போவதைக் குறைத்துக் கொண்டது.  ஒரு நாள் இரவு. மழை கொட்டியது. ஆடு, மாடு, கோழி மூன்றும் கொட்டகைக்குள் ஒதுங்கின. சுண்டெலி எங்கேயோ போய்ப் பதுங்கிக்கொண்டது. இரவில்கரண்ட் போய்விட்டது.  எலிப்பொறியில் ஏதோ சத்தம் கேட்டது. வீட்டுக்கார அம்மா மெதுவாக எழுந்து அடுப்படிக்குப் போனார். இருட்டில் எதுவும் சரியாகத் தெரியவில்லை.  தட்டுத் தடுமாறிப்போய் எலிப் பொறியில் கை வைத்தார்.  “நச்” என்று கையில் எதுவோ கொத்தியது.  “அய்யோ! அம்மா!” என்று அலறினார். அம்மா அலறுவதைக் கேட்டு வீட்டுக்கார அய்யா எழுந்து ஒடிவந்தார்.மெழுகுவர்த்தியைப் பொருத்திப் பார்த்தார்.  எலிப்பொறியில் மாட்டிக் கிடந்தது ஒரு பாம்பு!  பாம்பை ரெண்டு போடு போட்டார்.  பிறகு பாம்பை வெளியே விட்டெறிந்தார்.  எலிப்பொறியையும் சேர்த்து வீசினார்.  இரவு பூராவும் அம்மாவுக்குக் காய்ச்சல் அடித்தது. காலையில் நாட்டு வைத்தியர் வந்தார்.  குடிக்கக் கசாயம் கொடுத்தார்.கொஞ்சம் காய்ச்சல் குறைந்தது. “மூணு வேளை கோழிச்சாறு குடுங்க” என்று வைத்தியர் சொல்லி விட்டுப்போனார். “க்வாக்.. க்வாக்..க்வாக்..” என்று கோழியைக் கூப்பிட்டார்.  தானியம் கிடைக்கும் என்று கோழி வந்தது. ஆனால்... அய்யா குனிந்து கோழியை இறுக்கிப் பிடித்தார். கோழி மிரண்டது. கொஞ்ச நேரத்தில் கோழி குழம்பாகிவிட்டது.  சுண்டெலிக்கு நண்பர்களில் ஓர் ஆள் குறைந்தது. மதியம் சொந்தக்காரர்கள் வந்தார்கள்.  “நாட்டு வைத்தியர் கிடக்கார். மதுரைக்குப் போயப் பெரிய ஆஸ்பத்திரியில் பாருங்க” என்றார்கள். “பணத்துக்கு எங்கே போக?” என்று வீட்டுக்கார அய்யா கேட்டார். “ஆட்டை வித்துட்டு வாங்க” என்று அவர்கள் யோசனை 66 சொன்னார்கள். வீட்டுக்காரர் தோட்டத்துக்குப் போய் ஆட்டைப் பிடித்தார்.

ஆடு மிரண்டது. பழகிய இடத்தைவிட்டுப் போக அதுக்கு இஷ்டம் இல்லை.  ‘’ம்மே!ம்மே! ம்மே!” என்று பரிதாபமாகக் கத்தியது.  எலி கொஞ்சதூரம் ஆட்டின் பின்னால் ஒடியது. பிறகு பயந்து திரும்பி விட்டது. வீட்டுக்கார அய்யா ஆட்டை விற்றுப் பணத்தோடு திரும்பி வந்தார். இன்னொரு நண்பன் குறைந்தான். வீட்டுக்காரர் மதுரைக் குப் பஸ்ஸில் போகலாம் என நினைத்தார் சொந்தக்காரர் ஒருவர் சொன்னார், “பஸ் நினைச்ச நேரத் தில் கிடைக்குமா? இருபது மைல் தானே! மாட்டை வண்டியில் பூட்டுங்க! ஒட்டுங்க மதுரைக்கு!” என்றார். “அதுவும் நல்ல யோசனைதான்” என்றார் அய்யா.  மாட்டை வண்டியில் பூட்டினார்கள், மாடு மிரண்டது.  ‘இருபது மைல் போகணுமா? பாதை குண்டும் குழியுமா இருக்குமே!’ மாடு நினைத்துப் பெருமூச்சு விட்டது.  மாட்டின் பேச்சை யார் வீட்டுக்கார அம்மாவும் அய்யாவும் வண்டியில் ஏறி விட்டார்கள். வண்டியோட்டி ஹை! ஹை! என்று மாட்டை விரட்டினார். மாடு தொசுக்கு புசுக்கு என்று ஒடியது. எலி கொஞ்ச தூரம் வண்டிக்குப் பின்னால் ஓடியது. “மதுரைக்குப் போகதடீ!” என்று உருக்கமாகப் பாடியது.  பிறகு பயந்து திரும்பி விட்டது. இப்போது நண்பர்கள் யாரும் இல்லை. சுண்டெலி தோட்டத்தில் தனியாகத் திரிந்தது.  கவலையோடு இருந்தது. “யாருக்காவது பிரச்சனைன்னா கவனிங்கப்பா!” என்று முணுமுணுத்தது.