மதுரை, ஜூலை 6- ரேசன் கடைகள் மூலம் கொரோனா கால பேரிடர் நிவாரணம் “ஆயிரம் ரூபாய் உதவித்தொகை” வழங்கும் செயலி லாக் செய்யப்பட்டதால் உத வித் தொகை பலருக்கு வழங்கப்பட வில்லை. அதேபோல் ஜூலை மாதத் திற்கு ரேசன் கடைகளில் வழங்கப் படும் சீனி, பருப்பு, பாமாயில் ஆகிய வற்றை பணம் செலுத்தியே பெறவேண்டும். மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிள், பரவை பேரூ ராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊராட்சிகளில் அமல்படுத்தப்பட் டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 5 லட்சத்து 39 ஆயி ரத்து 331 அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா ரூ.1,000 வழங்க ரூ.53 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று நிவாரணத் தொகை யை வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் செவ்வாய் மாலை முதல் பணம் வழங்குவதற்கான அர சின் இணையதள செயலி செயல்பட வில்லை. பணப்பற்றக்குறை ஏற்பட் டுள்ளது. பணம் வந்தவுடன் வழங்கு வதாக என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல்அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு “ஜூன் 27 ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை மட்டுமே அரசு வழங்க உத்தர விட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று கடை ஊழியர்கள் வழங்கி யுள்ளார்கள் இதில் சிலர் விடுபட்டு போய் உள்ளனர் அதற்குள் பணம் வழங்குவதற்கான செயலி லாக் செய்யப்பட்டுவிட்டது மீண்டும் விடு பட்ட நபர்களுக்கு வழங்கவேண்டும் என்று சென்னைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. உத்தரவு வந்தவுடன் வழங்கப்படும் என்றார்,
ரேஷன் பொருட்கள் இலவசமில்லை
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ரேசன்கடைகளில் அரிசி, பருப்பு, ஜீனி, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்களை இலவச மாக வழங்கப்பட்டுவந்தன. ஆனால், ஜூலை மாதத்திற்கு அரிசி, கோதுமை தவிர எந்தப் பொருளும் இலவசமாக வழங்கப்பட மாட்டாது. இலவசமாக வழங்குவதற்கான உத்தரவுகள் ஏதும் அரசிடமிருந்து இதுவரை மதுரை மாவட்டத்திற்கு வரவில்லை. தமிழக அரசு மதுரை மாவட்டத் தில் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள பகுதி களில் வழக்கம்போல் அத்தியாவசி யப் பொருட்களை இலவசமாக வழங்கவேண்டும். நமது நிருபர்