tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்  திருச்சிராப்பள்ளி

, மார்ச் 12 - திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும்  தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கின்றன.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆண்டு  திட்ட நிரலின்படி, துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங் களை நிரப்பிடும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான அறி விப்பாணை 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட வுள்ளது.  இத்தேர்வினை, தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும்  வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் 14.3.2025 வெள்ளிக்கிழமை காலை  10 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. மேற்கண்ட பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுநர்களை  கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சி யளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித் தேர்வுகள் நடத்தப் பட்டு இலவசமாக பாடக் குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித் தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

 மார்ச் 13, 18, 25 தேதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

 தஞ்சாவூர், மார்ச் 12-  தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  இதுநாள் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடை யாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் 3  கோட்ட அளவிலும் நடைபெறவுள்ளது. மார்ச் 13 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல கத்திலும், மார்ச் 18 அன்று கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் கேஎம்எஸ்எஸ் வளாகத்திலும், மார்ச்  25 அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கிராம சேவை கட்டிடத்திலும் முகாம் நடை பெற உள்ளது.  இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு  தொண்டை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும்  கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். மருத்துவ அலுவ லர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப  அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப் படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவ ணங்களுடன் வந்து கலந்து கொள்ளலாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளி களுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப் பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்

. தஞ்சாவூர் அருகே  ரவுடி வெட்டிக் கொலை

தஞ்சாவூர், மார்ச் 12 - தஞ்சாவூர் அருகே முன் விரோதம் காரணமாக ரவுடி  அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பி.குறுந்தையன் (50). இவர் அப்பகுதியி லுள்ள தனது தோப்புக்குச் செல்வதற்காக செவ்வாய்க் கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஏழுப்பட்டி டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற இவரது மோட்டார் சைக்கிள் மீது பின்னால்  வந்த கார் மோதியது.  இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த குறுந்தை யனை காரிலிருந்து இறங்கிய நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதனால், பலத்த காயமடைந்த குறுந்தை யன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு  நிகழ்விடத்துக்கு வந்த அப்பகுதி மக்கள், அரிவாளால்  வெட்டிவிட்டு காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றவர் களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். இவர்களில் ஒருவர்  பிடிபட்டார். தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலை யத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று மேற்கொண்ட முதல்  கட்ட விசாரணையில், காவல் துறையினரின் ரவுடி பட்டிய லில் குறுந்தையன் இடம்பெற்றுள்ளதும், இவர் அப்பகுதி யில் 2013 ஆம் ஆண்டில் நிகழ்ந்த உலகநாதன் கொலை  வழக்கு, 2014 ஆம் ஆண்டில் உதயா கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், பொதுமக்களிடம் சிக்கிய நபரிடம் காவல்  துறையினர் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரி யைச் சேர்ந்த வடிவேலன் (38) என்பதும், ஏழுப்பட்டியைச்  சேர்ந்த ஒத்தக்கை ராஜா என்ற ராஜாவுக்கும் (42), அவரது நண்பர்களுக்கும் கொலைச் சம்பவத்தில் தொடர் பிருப்பதும் தெரிய வந்தது.  எனவே, ஏற்கெனவே நிகழ்ந்த கொலை சம்ப வத்துக்கு பழிவாங்குவதற்காகக் குறுந்தையன் கொலை  செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ராஜா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.