tamilnadu

img

வங்கிக் கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்படுமா? பிரதமர் மோடி படத்தைப் போட்டு மோசடி

புதுதில்லி, ஜன. 2 - பாஜகவினர் அனுப்பியது போல பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் ஒரு லிங்க், சமூக வலைதளங் களில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையல்ல, அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் வங்கிக் கணக்கிலிருக்கும் பணம் மோசடி செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன், ஒன்றிய அரசின் அடை யாளங்களும் இணைக்கப்பட்டு, ரூ. 675 அல்லது ரூ. 5000 உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்கள் கணக்கில் வர கார்டை ஸ்கிராட்ச் செய்யவும் என்று ஒரு தகவலுடன் சமூக வலைதளங்களில் பலருக்கும் இந்த லிங்க் பகிரப்பட்டு வருகிறது. மேலும், பாஜக கட்சியிலிருந்தே இந்திய மக்கள் அனைவருக்கும் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 5000 வரை இலவசமாக வரவு  வைக்கப்படும் என்றும் தாமரை சின்னத்துடன் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த லிங்க்கைத் தவறியும் யாரேனும் கிளிக் செய்துவிட்டால், அந்த செல்போன் எண்ணுடன் இணைக்கப் பட்டிருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு விடும் அல்லது அந்த செல்போனில் உள்ள விவரங்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, முன்பின் தெரியாத எண்களிலிருந்து எண் ஒன்றை அழுத்தவும் என்று வந்தால் அந்த அழைப்புகளை தவிர்த்து விட வேண்டும் என்றும் இது குறித்து 1930க்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.