சிபிஎம் மாநாட்டிற்கு நிதி அளித்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுமி
சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபாவின் ஆட்டோவில் தினமும் பள்ளி செல்லும் சிறுமி, தினம்தோறும் மாவட்டத் தலைவர் மற்ற தோழர்களிடம் மாநாட்டு நிதி கேட்பதை அறிந்து, தானும் நிதி வழங்க முன் வந்து, தனது சிறுசேமிப்பில் இருந்த தொகையினை மாநாட்டிற்கு நிதியாக அளித்து உதவியுள்ளார். இதுகுறித்து, மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா கூறுகையில், நான் நிதி கேட்டதை உணர்ந்த, எனது ஆட்டோவில் அமர்ந்திருந்த எஸ். அவந்திகா என்ற நான்காம் வகுப்பு மாணவி, தான் சேமித்து வைத்திருந்த சுமார் ரூ.200 மதிக்கத்தக்க சில்லறை பணத்தை அள்ளி, மாமா வைத்துக் கொள்ளுங்கள் என கொடுத்தாள். நான் நெகிழ்ந்து போனேன். தன்னுடைய சேமிப்பை நமக்கு அளிக்க வேண்டும் என்ற உணர்வுக்கு தலைவணங்கி, அவளது சேமிப்பில் இருந்து 26 ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டேன். எதிர்காலத்தில், கஷ்டப்படும் தோழர்களுக்கு கை கொடுக்க விழுதுகள் பல உள்ளன என்பதை உணர்ந்தேன் என்று தெரிவித்தார்.