tamilnadu

img

இந்தி திணிப்பை கண்டித்து திமுக முன்னாள் நிர்வாகி தற்கொலை

சேலம், நவ. 26- இந்தித் திணிப்பைக் கண்டித்து சேலத் தில் திமுக நிர்வாகி ஒருவர் பெட்ரோல் ஊற் றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சேலம், மேட்டூர் அருகேவுள்ள பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தாழையூர் பகுதி யைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி  அமைப்பாளராக இருந்தவர். இவருக்கு ஜானகி  என்ற மனைவி, மணி, ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் திமுக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங் களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார். மேலும், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு கலைஞர் கரங்களில் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில், பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தாழையூர் திமுக அலுவலகத்துக்கு சென்று, ஒரு வெள்ளைத்  தாளில், ``மோடி அரசே... மத்திய அரசே! இந்தியை திணிக் காதே! இந்தி வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க, இந்திய கோனமான எழுத்து. கோமாளி எழுத்து இந்தி மொழி எதற்கு?

மாணவ - மாணவிகள் வாழ்க்கையைப் பாதிக்கும். இந்தி ஒழிக... இந்தி ஒழிக” என எழுதியிருக்கிறார்.  பின்னர்தான் வாங்கி வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்துக்கொண்டு, அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணே சன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்த தங்க வேல் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வர் இரங்கல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல் ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம். ஏற்கெனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது. போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்”என்று கேட்டுக் கொண்டுள்ளார்.