சிபிஎம் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் கா.சின்னையா காலமானார்
மாநிலச் செயற்குழு இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் கா.சின்னையா (வயது 75) ஞாயி றன்று (ஏப்.13) காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: 1968ஆம் ஆண்டு தரமணி எஸ்ஆர்பி டூல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், 1980-களில் தொழிற்சங்க நிர்வாகியாக செயல்பட்டார். அப்போது நடை பெற்ற வேலைநிறுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார். 1972 கால கட்டத்தில் அதிமுக பேச்சாளராக இருந்த அவர் மார்க்சிஸ்ட் கட்சி வகுப்புகளில் கலந்து கொண்டதன் காரணமாக, 1973ஆம் ஆண்டு கட்சி உறுப்பினராக மாறினார். அப்போது சு.பொ.அகத்திய லிங்கம் போன்றோரோடு இணை ந்து சோசலிஸ்ட் வாலிபர் முன்ன ணியை உருவாக்கினார். அதன் பின் வாலிபர் சங்கத்தை வளர்த்தெடுப் பதில் முக்கிய பங்காற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் திரு வான்மியூர் கிளைச் செயலாளரா கவும், மயிலாப்பூர் பகுதிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மயிலாப்பூர் பகுதிச் செயலாளராக இருந்த தோழர் எஸ்.கே.சீனி வாசன் உடல் நலிவுற்றபோது பொறுப்பு பகுதிச் செயலாளராக செயலாற்றினார். கட்சியின் முழு நேர ஊழியராக மாறிய அவர், ஒன்றுபட்ட சென்னையின் மாவட்டக் குழு உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். தென்சென்னை மாவட்டக்குழு உருவான போது அதன் முதல் மாவட்டச் செயலாளராக பொறுப் பேற்று திறம்பட செயலாற்றினார். மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். அண்மைக் காலமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமா னார். அவரை இழந்து வாடும் அவ ரது குடும்பத்தாருக்கும் தோழர்க ளுக்கும் அனுதாபத்தையும் ஆறு தலையும் மாநிலச்செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஞ்சலி தோழர் சின்னையா உடல் அஞ்சலிக்காக பிளாட் எண் 2-3, எஸ்தர் கார்டன், முதல் தெரு, மாடம்பாக்கம், சென்னை (தாம் பரம் பாரத் பல்கலைக் கழகம் எதி ரில்) என்ற முகவரியில் வைக்கப் பட்டுள்ளது. அன்னாருக்கு புக ழஞ்சலிக் கூட்டம் திங்களன்று (ஏப்.14) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக மதியம் 1 மணி அளவில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு (பழைய சிறைச்சாலை) வழங்கப்படும் என்று கட்சியின் தெ ன்சென்னை மாவட்டச் செயலா ளர் ஆர்.வேல்முருகன் தெரி வித்துள்ளார்.