சென்னை, ஆக. 19- முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எஸ். பத்மநாபன், உடல்நலக் குறைவினால் சென்னையில் கால மானார். 1940ஆம் ஆண்டு திருவனந்த புரத்தில் பிறந்த பத்மநாபன், 1959ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி யவர் ஆவார். கடந்த 2000-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி யாகவும் உயர்ந்த அவர், 2002ஆம் ஆண்டு பதவி ஓய்வு பெற்றார். ராணுவ வாழ்க்கையில் தான் சந்தித்த பல்வேறு சவால்கள் குறித்தும், ராணுவம் குறித்தும் இந்தியன் மிலிட்டரி பிக்ஷன் (Indian military fiction) மற்றும் ரைட்டிங் ஆன் தி வாள் (Writing on the wall) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென் னையில் குடியேறிய பத்மநாபன், உடல் நலக்குறைவு காரணமாக திங்களன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய ராணுவத்தினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.