மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான டி.லட்சுமணன் நினைவைப் போற்றும் வகையில் தீக்கதிர் நாளிதழ் 15-10-2020 வியாழனன்று சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுகிறது. சிறந்த எழுத்தாளரான அவர், மாற்றுத்திறனாளிகள்,சிறுபான்மையினர் நலன் காக்க இடையறாது போராடியவர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைவளர்த்தெடுப்பதில் அரும்பங்கு ஆற்றியவர். கட்சியின் பல்வேறுமாவட்டங்களுக்கு பொறுப்பேற்று வளர்ச்சிக்கு வழிகாட்டியவர் எனபன்முகம் கொண்ட தோழர் டி.லட்சுமணன் தொண்டினை நினைவுகூர்ந்து பல்வேறு எழுத்தோவியங்கள் இடம்பெற உள்ளன. கட்சியின் மாவட்டக்குழுக்கள் கூடுதல் பிரதிகளுக்கு முன்கூட்டியே அந்தந்த பதிப்புகளில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
===பொதுமேலாளர்===