tamilnadu

ஆன்லைன் ரம்மி, சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைகோரும் வழக்கு... உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை....

மதுரை:
ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய கோரும் வழக்கை செவ்வாயன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரிக்கவிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இணையதளத்தில் பல்வேறு விதமான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் ஆகிய விளையாட்டுகள் அதிகளவில் இணையதளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு இளைஞர்கள்பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் விளம்பரம்செய்வதன் மூலம் அதிகளவில் இளைஞர்கள் இதில் மூழ்கி தங்கள் பணங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பல இளைஞர்கள் தற்கொலைசெய்து கொண்டு வருகின்றனர் ஆன்லைன்சூதாட்டம், ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்.

விராட் கோலி, நடிகை தமன்னா மற்றும்பல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்து இந்தவிளையாட்டை ஊக்குவித்து வருகின்றனர். இந்த விளையாட்டுக்கு தடை விதிப்பதுமட்டுமின்றி விளம்பரத் தூதுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஃஸ்வி,முத்துகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலமேகம் இந்த வழக்கைஅவசர வழக்காக திங்கள் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென முறையீடு செய்தார்.இந்த வழக்கை செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கூறியுள்ளனர்.