tamilnadu

img

சுருக்குமடி வலையை தடை செய்ய 11 மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, பிப்.1- மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி  உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கடல் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி சுருக்கு மடிவலை, இரட்டை மடிவலை அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை ஒன்றிய, மாநில அரசுகள் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;