tamilnadu

img

மீனவர் சங்க பிரதிநிதிகளை இணைத்து நலவாரியத்தை செயல்படுத்துக!

சென்னை, ஆக.10 - சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங் களின் பிரதிநிதிகளை இணைத்து மீன வர் நலவாரியத்தை செயல்படுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி  தொழிற்சங்க கூட்டமைப்பு வலி யுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை செவ்வாயன்று (ஆக.8) கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் எஸ்.அந்தோணி, பொருளா ளர் எஸ். ஜெயசங்கரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். பரமசிவன், சதீஸ், தென்பெண்ணை ஆற்றுப்படுகை மீன வர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.அறி வழகன் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், அரசு கட்டுப் பாட்டில் உள்ள ஏரி, குளங்கள், அணை களில் மீன்பாசி குத்தகையை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங் களுக்கு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றுப் படுகை மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு, 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் சாத்த னூர் அணையில் மீன்பிடிப்பு குத்தகை உரிமத்தை வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்களில் 30 பேரை மட்டும் பங்கு மீனவர்களாக பரிசல் மூலம் மீன்பிடிக்க அனுமதித்திட வேண்டும். பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமையை பவானிசாகர் மீன வர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர் களுக்கு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 2013-ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. அந்த அலுவல கத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மீன்பிடி கலன்களுக்கு (படகு, கட்டு மரம், வள்ளம்) வழங்கப்படும் மீன்பிடி உரிமத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக மாற்றப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததை அரசாணையாக வெளி யிட வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், கோரிக்கைகளை பரி சீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித் தார் என்று கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் எஸ்.அந்தோணி தெரிவித்தார்.