tamilnadu

img

அரியலூரை அடுத்துள்ள வெ.விரகாலூரில் பட்டாசு விபத்து; 11 பேர் பலி

அரியலூர், அக்.9- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 11 பேர் உயி ரிழந்தனர். 6 பேர் காயமடைந்த னர்.   அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகா லூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தி ரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வரு கிறது. இங்கு  திங்களன்று காலை  9.30மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வெடிகள் வெடித்தன.  இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த னர்.  இவர்களில் மூன்று பேர் பெண்கள், ஏழு பேர் ஆண்கள். ஒரு உடல் உருக்கு லைந்ததால் ஆணா, பெண்ணா  என அடை யாளம் காணமுடியாத நிலையில் உள்ளது. படுகாயமடைந்த  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் விக்னேஸ்வரன் (24), புதுராஜன் மகன் ராஜபாண்டியன் (37) வீராசாமி மகன் முத்துப்பாண்டி (33), மோகன் மகன் ஜெகன் (33,) சூசை மகன் ஏசுதாஸ் (60) வாசு மகன் சத்தியமூர்த்தி (20) ஆகிய 6 பேர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு நிவாரணம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்ப தாயிரம் ரூபாயும்  பொது நிவாரண நிதியி லிருந்து வழங்க முதல்வர் உத்தர விட்டுள்ளார்.