காத்திருப்பு போராட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹூசைன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் காசிநாதன், ஆலை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாபநாசம், டிச. 26- தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு 26-ஆவது நாட்களாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமண்டங்குடியில் இயங்கிக் கொண்டி ருந்த திரு ஆருரான் சர்க்கரை ஆலையின் பழைய நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் ரூ.150 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் கடன் வாங்கி, திவாலாகியுள்ளது. இதனால், ஏலத்தில் வேறொரு நிர்வாகம் ஆலையை எடுத்துள்ளது. புதிய நிர்வாகம் அந்த கடனுக்கும் எங் களுக்கும் சம்பந்தமில்லை என கூறி, விவசாயிகளை கடனாளியாக மாற்றியுள்ள னர். பழைய நிர்வாகம் கடன் வாங்கி உள்ள தை கூறியிருந்தால், தேசிய தீர்ப்பாயம் அதற்கும் சேர்த்து நிவாரணத்திற்கும் முடிவு செய்திருக்கும்.
வாங்காத கடனை கட்டச்சொல்வதெப்படி?
ட்டியலில் காட்டாமல் மறைத்து விட்டது. புதிய நிர்வாகமும் அந்த கடனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறினால், வாங்காத கடனை விவசாயிகள் எப்படி செலுத்த முடியும்? தமிழக அரசு, பழைய ஆலை நிர்வாகியை கைது செய்து உடனே ஜாமீனில் விடுதலை செய்தது. விவசாயிகள் கடனை செலுத்தா விட்டால் அவர்களையும் கைது செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சரை சந்தித்து நீண்ட நேரம் பேசினேன். ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் மோசடியாக கடனை பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது எவ்விதத்திலும் நியாயம் இல்லை என கூறியதை வேளாண் துறை அமைச்சரும் ஏற்றுக்கொண்டு உள்ளார்.
விவசாயிகளை மிரட்டவோ கட்டாயப்படுத்தவோ கூடாது
தமிழக அரசு பழைய ஆலை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அல்லது புதிய நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் மோசடியாக விவசாயிகளின் பெயரில் கடனை வழங்கிய வங்கி அதிகாரிகள் மீது வழக்கு பதிவுச் செய்ய வேண்டும். எந்தச் சூழலிலும் விவசாயிகளை மிரட்டுவதோ, விவசாயிகளை கடனை கட்ட கட்டாயப்படுத்துவதோ கூடாது. அரசை பொறுத்தவரை விவசாயிகளின் கோரிக்கை யை ஏற்றுக் கொள்கிறோம். அவர்களின் கோரிக்கை நியாயமானது தான் என்றார்.
தடையில்லாச் சான்று வழங்க வேண்டும்
இந்நிலையில் வங்கிகளில் இருந்து எந்தவித நோட்டீஸ்களும் விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. வேறு ஒரு வங்கியில் விவசாயி கள் கடன் கேட்டால் ஏற்கனவே கடன் இருப்பதாக கூறி மறுக்கக்கூடாது. விவசாயிகளுக்கு தடை இல்லா சான்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் துறை அமைச்சர் நியாயமாக புரிந்து கொண்டுள்ளார்.வங்கி அதிகாரிகளும், ஆலை நிர்வாகமும் கூட்டுக் கொள்ளையை நடத்தியுள்ளனர்.எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.இரவு பகலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.இதில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமானால் அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.அரசு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும். இது தொடர்பாக முதல்வரை சந்திப்பதற்கும் முயற்சி செய்வோம் என்றார்.