tamilnadu

img

மறவமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, பிப்.5- வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.  நெல் கொள்முதல் நிலையம்,  வேளரேந்தில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்  அமைக்க வேண்டும்,  பெரியார் கால்வாய்  தண்ணீரை மறவமங்கலம் கண்மாய்க்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மறவமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் சார்பில் ஆரப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் வீரபாண்டி,  மாவட்ட செயலாளர்  மோகன் ஒன்றிய செய லாளர் சாத்தப்பன், உயர்நீதிமன்ற வழக்க றிஞர் பாலா சீதா ராம், ஒன்றிய தலைவர் திரு நாவுக்கரசு, மாவட்ட நிர்வாகிகள்  ஜெய ராமன், ஆறுமுகம், விஸ்வநாதன், தமிழ்  நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் தண்டியப்பன் ஆகியோர் பேசி னர்.

;