tamilnadu

img

கருகும் குறுவை பயிரைக் காப்பாற்ற போராடும் விவசாயிகள்

நாகப்பட்டினம், ஆக.14 -  தண்ணீர் இன்றி கருகும் குறுவைப் பயிரைக் காப்பாற்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று, கர்நாடக அரசு  தமிழ்நாட்டுக்கான உரிமை நீரை  வழங்க வேண்டும் என வலியுறுத்தி யும், தமிழகத்திற்கு உரிய தண்ணீ ரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், எதையும் கண்டு  கொள்ளாத ஒன்றிய அரசைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இயக்கங்களில் ஏராளமானோர் பங்கேற்று முழக்கமிட்டனர். இவ்வியக்கங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலை வரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி, நாகை மாவட்டச் செயலாளர் வீ.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.