தென்காசி, செப். 27- அரியமன்னார்குளம், காஞ்சிரவர்த்தி குளம், பாட்ட குளம், இலந்தைகுளம், பெரிய பஞ்சனார் குளம் ஆகிய குளத்துப்புரவுக ளுக்கு செல்லும் பாதை கடந்த ஒரு வருட காலமாக சல்லி கற்கள் மட்டும் கொட்டி வைத்துவிட்டு தார் சாலை போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது மேற்படி சாலையை உடனடியாக தார் சாலையாக அமைத்திட கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் புளியங்குடி நகர செயலாளர் சீனி பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜ்குமார், அண்ணாமலை முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்டத் துணைத் தலை வர் பி. வேலுமையில் துவக்கி வைத்து பேசினார். குத் தகை விவசாய சங்க மாவட்ட நிர்வாகி ரத்தினசாமி , பழ னிச்சாமி, சிபிஎம் புளியங் குடி நகரச் செயலாளர் மாரி யப்பன், ரத்தினம், விவ சாய சங்க நிர்வாகிகள் ஆகி யோர் பேசினர். ஆர்ப்பாட்டத் தை தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் டி.கணபதி முடித்து வைத் தார்.