tamilnadu

img

குப்பைகளின் கூடாரமாக மாறும் கொள்ளிடம்: விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ளது கொள்ளிடம் ஆறு.  சுற்றுவட்டார மக்கள் மற்றும் விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் குறைந்த தண்ணீரை  கொண்டு கோடைக் காலத்தில் வற்றா மல் ஓடுகிறது. இந்த ஆற்றின்  இடது கரையோரத்தில் கடலூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களான பெரம் பட்டு, மேலக்குண்டலபாடி, ஜெயங் கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி,  வல்லம்படுகை, வல்லத்துறை, தீத்து க்குடி, வல்லத்துறை, வடக்கு மாங்குடி, முள்ளங்குடி, கீழப்பருத்திக்குடி, வெள்ளூர் என்று 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  அதேபோல் ஆற்றின் வலது கரை பகுதியில் அளக்குடி ஆச்சாள்புரம், படுகை,  மாதிரவேலூர், பட்டியமேடு, எலத்தூர், சரஸ்வதி விளாகம்  என 15- க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் மயி லாடுதுறை மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகள் கொள்ளிடம் ஆற்று நீர் ஆதாரமாகக் கொண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு மோட்டார் பம்பு செட்டை பயன்படுத்தி விவ சாயம் செய்கின்றனர்.  மறுபுறத்தில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கடலூர் மாவட்டத்தில் சிதம்ப ரம், அண்ணாமலைநகர் கடலூர் ஆகிய பகுதிகளுக்கும் மயிலாடுதுறை மாவட் டத்தில் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆறு  விவசாயிகள் பாச னத்திற்கும் பொதுமக்கள் குடி தண்ணீ ருக்கும் முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.  இந்த நிலையில்தான் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வீடுகளின் கழிவுகள், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை டிராக்டரில் கொண்டு வந்து மலைபோல் குவித் துள்ளனர்.  இது கொள்ளிடம் ஆற்றுக்கு மட்டு மல்ல குடி நீர் பாசனம், மீன் வளத்தை பாதிக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித் திருக்கும்  விவசாயிகள், சம்பந்தப் பட்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் கடலூர் மாவட்ட துணைச் செய லாளர் பழ.வாஞ்சிநாதன் கூறுகை யில்,“ மழைக்காலங்களில் ஆற்றில் அதிக தண்ணீர் வரும்போது கரை யோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தண்ணீரில்அடித்துச்சென்று விவ சாய நிலங்களுக்கு செல்லும். இதனால் மண் வளம் பாதிக்கும்” என்றார். ஆற்றின் கரையோரத்தில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டக்கூடாது என அறிவுறுத்தும் பதாகை வைக்க  வேண்டும் என்று பொதுப்பணித் துறைக்கு வேண்டுகோள் விடுத்தார். அ.காளிதாஸ்