தஞ்சாவூர், அக். 11 - காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும்; ஒருதலைப்பட்சமாக செயல்படும் ஒன்றிய அரசு இப்பிரச்சனையில் தலை யிட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி காவிரி பாசனப் பகுதிக்கு உட்பட்ட 12 மாவட்டங் களில் புதனன்று மாபெரும் முழு அடைப்பு - சாலை மறியல் போராட்டங் கள் நடைபெற்றன. காவிரி பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 2 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் வர்த்தக நிறு வனங்கள் அடைக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள், தனியார் பேருந்து கள் ஓடவில்லை. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில், கடைவீதிகள், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. வங்கிகள், அஞ்சலகங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக விவசாயிகள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு மறியல் போராட்டங்களை நடத்தினர். பல இடங்களில் சாலை மறியல்களும் நடைபெற்றன.
தஞ்சாவூர்
காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பில் அறைகூவல் விடுக்கப் பட்டிருந்த இப்போராட்டத்திற்கு, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அர சியல் கட்சிகள் ஏற்கெனவே தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தன. இதனால் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் முழுவீச்சில் நடைபெற்றது. தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்ற விவசாயிகள், எல்ஐசி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகரச் செயலாளர் வடிவேலன், திமுக சார்பில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜேம்ஸ், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலா ளர் முத்து. உத்திராபதி, சோ.பாஸ்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், சொக்கா ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலா புதீன், மனிதநேய மக்கள் கட்சி ஐ.எம். பாதுஷா, திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அண்ணா துரை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில விவசாய அணித் தலைவருமான ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்கள் சாமி. நடராஜன் (சிபிஎம்), பி.எஸ். மாசிலாமணி (சிபிஐ), மாவட்டச் செயலாளர் எம். சேகர், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் தலைமை அஞ்சலக வாயிலில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் டி. ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, திமுக மாவட்டச் செயலாளர் என். கௌதமன், காங்கி ரஸ், மதிமுக, விசிக, திக, மமக, சிபிஐ உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் - இயக்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர். இதே போல மயிலாடுதுறை, திருச்சிராப் பள்ளி, புதுக்கோட்டை, கடலூர், அரிய லூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.