tamilnadu

img

பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து  விவசாயி பலி

தஞ்சாவூர், ஜுன் 26-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.ஆர். கணேசன்(65) என்ற விவசாயி, செவ்வாய்க்கிழமை மாலை, தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எள் வயலில் மறைந்திருந்த விஷப்பாம்பு அவரை தீண்டியது. இதில், வயலுக்குள் மயக்கம் அடைந்து கிடந்த எம்.ஆர்.கணேசனை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு பேராவூரணி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை சுமார் 1 மணியளவில் எம்.ஆர்.கணேசன் உயிரிழந்தார். உடற்கூறாய்வுக்கு பிறகு வியாழக்கிழமையன்று கணேசன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, பேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் போலீஸ் நிழற் குடை அருகில் சாலை பிரியும் இடத்தில், செல்லும் வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதனால் நெடுஞ்சாலைத் துறையினர் போலீஸ் நிழற் குடை அருகில் கும்பகோணம், திருவலஞ்சுழி, வலங்கைமான், தஞ்சாவூர், திருக்கருகாவூர், மெலட்டூர், திட்டை, சாலிய மங்கலம் உள்ளிட்ட ஊர்களை அடையாளப் படுத்தும் வகையில் கி.மீ உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விளம்பர பலகையை வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.