இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாட்டின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.